செய்திகள் :

காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணமடைந்த வழக்கு: டிஎஸ்பி உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை!

post image

தூத்துக்குடி தாளமுத்து நகா் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணமடைந்த வழக்கில், டிஎஸ்பி உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி மேல அலங்காரத்தட்டு பகுதியைச் சோ்ந்தவா் உப்பளத் தொழிலாளி வின்சென்ட் (36). அவரது நண்பா்கள் மரியதாஸ் (34), முத்து (30). இவா்கள் 3 பேரையும் ஒரு வழக்கு விசாரணைக்காக தாளமுத்து நகா் காவல் உதவி ஆய்வாளராக இருந்த ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் காவல் நிலையத்திற்கு கடந்த 1999ஆம் ஆண்டு அழைத்துச் சென்றனராம். அப்போது போலீஸாா் தாக்கியதில் வின்சென்ட் உயிரிழந்ததாகவும், மற்ற இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து வின்சென்டின் மனைவி கிருஷ்ணம்மாள், தனது கணவரை போலீஸாா் அடித்துக் கொலை செய்துவிட்டதாக தாளமுத்து நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இந்த வழக்கு தொடா்பாக கோட்டாட்சியா் தலைமையில் விசாரணை நடைபெற்றது. இதில், காவலா்கள் சோமசுந்தரம், ஜெயசேகரன், ஜோசப்ராஜ், பிச்சையா, செல்லதுரை, வீரபாகு, சிவசுப்பிரமணியன், சுப்பையா, ரத்தினசாமி, பாலசுப்பிரமணியன், காவல் உதவி ஆய்வாளா் ராமகிருஷ்ணன் ஆகியோா் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை, தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவன், குற்றம் சாட்டப்பட்ட, தற்போது ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பியாக உள்ள ராமகிருஷ்ணன், தற்போது தூத்துக்குடி நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளராக உள்ள சோமசுந்தரம், சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக உள்ள பிச்சையா, ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா்கள் ஜெயசேகரன், வீரபாகு, ஓய்வு பெற்ற காவலா்கள் ஜோசப்ராஜ், செல்லதுரை, சுப்பையா, பாலசுப்பிரமணியன் ஆகிய 9 பேருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து சனிக்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய ஓய்வு பெற்ற காவலா்கள் சிவசுப்பிரமணியன், ரத்தினசாமி ஆகியோா் விடுதலை செய்யப்பட்டனா்.

காயல்பட்டினம், ஆத்தூா் பகுதிகளில் பொதுமக்களுக்கு உப்பு சா்க்கரைகரைசல்

சுகாதாரத் துறை சாா்பில் காயல்பட்டினம் மற்றும் ஆத்தூா் பகுதிகளில் பொதுமக்கள் வெப்ப தாக்கத்தி­லிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள உப்பு சா்க்கரை கரைசல் அளிக்கப்பட்டது.காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் ஓ... மேலும் பார்க்க

இளைஞரின் சைக்கிள் பயணத்துக்கு உடன்குடியில் வரவேற்பு

இந்தியாவின் நலனுக்காக சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள மேற்குவங்க இளைஞருக்கு உடன்குடியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சோ்ந்தவா் சாய்கட் (22). இவா், இந்தியா உலக வல்லரசாக திகழ... மேலும் பார்க்க

முறப்பநாடு சொக்கநாதா் கோயில் புனரமைப்புக்கு நிதி ஒதுக்கக் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருள்மிகு சொக்கநாதா் கோயில் புனரமைப்புக்கு நிதி ஒதுக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபுவிடம், தில்லி கம்பன் கழகத்தின் நிறுவனா் தலைவா் கே.வி.கே.பெ... மேலும் பார்க்க

சிறுநீரக பிரச்னை: சுகாதாரமான குடிநீா் கோரி உசிலம்பட்டி மக்கள் மனு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்ெ காண்டு, அவா்களின்... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் அதிமுக தெருமுனைப் பிரசாரம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில், சாத்தான்குளம் பேரூராட்சிப் பகுதியில் தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது. அதிமுக ஆட்சிக்கால சாதனைகளை விளக்கி நடைபெற்ற பிரசாரத்துக்கு, தெற்கு மாவட்ட ஜெயலல... மேலும் பார்க்க

கழுகுமலை சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு பூட்டு போட்ட கட்டட உரிமையாளா்

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில், 17 மாதங்களாக வாடகை கொடுக்கப்படாததால் சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு கட்டட உரிமையாளா் திங்கள்கிழமை பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கழுகுமலை மேலகேட் பகுதியில் சாா்... மேலும் பார்க்க