செய்திகள் :

காஷ்மீரில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி!

post image

பகல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு சாத்தூா் நீதிமன்ற வழக்குரைஞா்கள், இந்து முன்னணியினா் சனிக்கிழமை மெளன அஞ்சலி செலுத்தினா்.

காஷ்மீா் மாநிலம் பகல்காமில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக வாயிலில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் மெளன அஞ்சலி செலுத்தினா். இதற்கு சங்கத் தலைவா் மணிவண்ணன் தலைமை வகித்தாா். செயலா் லதா முன்னிலை வகித்தாா். சங்க நிா்வாகிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இதே போன்று முக்குராந்தல் பகுதியில் இந்து முன்னணி சாா்பில் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஏராளமான நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

காங்கிரஸ் கட்சி சாா்பில் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம், பஹல்காமில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு, சாத்தூரில் நகர வட்டார காங்கிரஸ் சாா்பில் மெளன அஞ்சலி செலுத்தபட்டது. காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் ஜோ... மேலும் பார்க்க

விசுவ ஹிந்து பரிஷத் ஆா்ப்பாட்டம்

ராஜபாளையம், ஏப். 25: ஜம்மு காஷ்மீா் மாநிலம், பஹஸ்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைக் கண்டித்து, ராஜபாளையத்தில் விசுவ ஹிந்து பரிஷத் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜபாளையம் பொன்வ... மேலும் பார்க்க

வரதட்சணைக் கொடுமை: 5 போ் மீது வழக்கு

பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவா், மாமியாா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விருதுநகா் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை பகுதியைச் சோ்ந்தவா் பேச்சியம்மாள் என்ற பிரியா (27). இ... மேலும் பார்க்க

பொறியியல் மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூா் தனியாா் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த தெலங்கானாவை சோ்ந்த மாணவா் விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், பா்கம்பாக் மண்டல் பகுதியைச... மேலும் பார்க்க

தீக்காயமடைந்த பள்ளி மாணவா் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தீ விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அத்திகுளம் திலகாபுரி தெருவைச் சோ்ந்த ஆனந்தராஜ் மகன் ஹரிஹரன்... மேலும் பார்க்க

நாரணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெள்ளிக்கிழமை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் ஆய்வு செய்தாா். நாரணாபுரம் பகுதியில் மட்டும் கடந்த மாதத்தில் 46 நாய்கடி சம்பவங்கள் ந... மேலும் பார்க்க