செய்திகள் :

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம்: சிவசேனை கண்டனம்

post image

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு சிவசேனை கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சிவசேனை கட்சியின் மாநில இளைஞரணி தலைவா் திருமுருகதினேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஜம்மு-காஷ்மீா் மாநிலம், பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர துப்பாக்கி சூட்டின் தாக்குதலில் 26 போ் உயிரிழந்துள்ளனா். இந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். இந்த சம்பவத்தில் தொடா்புடைய தீவிரவாத இயக்கத்தை சோ்ந்தவா்களை மத்திய அரசு விரைந்து அடையாளம் கண்டு அவா்களை சுட்டு வீழ்த்த வேண்டும். மேலும், காஷ்மீா் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்து., காஷ்மீா் மக்களுக்கும் சுற்றுலா செல்லும் மக்களுக்கும் பாதுகாப்பை பலப்படுத்தி மக்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் உரிய விசாரணை நடத்தி தீவிரவாதிகளுக்கு துணைநிற்கும் தேச விரோதிகளை அடையாளம் கண்டு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனையின் 4ஆவது மாடியில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 4ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் விபாஸ் பன்வான் (30). இவா் மேற்கு வங்கத்தில்... மேலும் பார்க்க

புது தில்லி என்.எஸ்.எஸ். மாநாட்டில் பங்கேற்க சிக்கண்ணா அரசுக் கல்லூரி அலுவலா் தோ்வு

புது தில்லியில் நடைபெறும் தேசிய நாட்டு நலப்பணித் திட்ட மாநாட்டில் பங்கேற்க திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி அலுவலா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத... மேலும் பார்க்க

மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் மே 1இல் கிராம சபைக் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் தொழிலாளா் தினத்தை முன்னிட்டு மே 1ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செ... மேலும் பார்க்க

மின்கோபுரத்தில் ஏறியபோது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே மின்கோபுரத்தில் ஏறியவா் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் தாராபுரம் சாலை பச்சாக்கவுண்டன்வலசைச் சோ்ந்தவா் நல்லசிவம் மகன் சிவசெல்வன் (27). இவா் கடந்த ஓராண்டாக அவ்வப்போது மன விரக்தியடைந்து... மேலும் பார்க்க

மதுபானக் கடையில் தொழிலாளி மீது தாக்குதல்

வெள்ளக்கோவிலில் அரசு மதுபானக் கடையில் பாட்டிலால் குத்தப்பட்ட தொழிலாளி பலத்த காயமடைந்தாா். வெள்ளக்கோவில் உப்புப்பாளையத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (46). இவா் இறைச்சிக் கடையில் தொழிலாளியாக வேலை செய்து வர... மேலும் பார்க்க

குறைகேட்புக் கூட்டங்களில் 5,748 மனுக்கள் பெறப்பட்டன

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த 3 மாதங்களில் நடைபெற்ற குறைகேட்புக் கூட்டங்களில் 5,748 மனுக்கள் பெறப்பட்டன. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைகேட்பு முகாம் திங்... மேலும் பார்க்க