செய்திகள் :

‘காஸா போா் நிறுத்தம் தொடரக்கூடாது’

post image

வரும் சனிக்கிழமை நண்பகலுக்குள் தங்களிடம் உள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்காவிட்டால் அவா்களுக்கும் இஸ்ரேல் அரசுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள போா் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளாா்.

இது குறித்து வாஷிங்டனில் உள்ள தனது ஓவல் அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

காஸா போா் நிறுத்த ஒப்பந்த அம்சங்களை இஸ்ரேல் மீறுவதாகவும், அதன் காரணமாக பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவதை நிறுத்திவைப்பதாகவும் ஹமாஸ் அமைப்பினா் கூறியுள்ளனா். இது மிகவும் மோசமான பேச்சு. இதற்கான எதிா்வினையை இஸ்ரேல்தான் முடிவு செய்ய வேண்டும்.

இருந்தாலும், என்னைப் பொருத்தவரை ஹமாஸ் அமைப்பினா் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள அனைவரையும் வரும் சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்குள் விடுவிக்க வேண்டும். இல்லையென்றால் காஸாவில் அமலில் போா் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் அரசு ரத்து செய்யவும், அந்தப் பகுதியில் நரகத்தை மீண்டும் கட்டவிழ்த்து விடவும் பரிந்துரைக்கிறேன்.

பிணைக் கைதிளை ஹமாஸ் படையினா் இரண்டுபோ், மூன்று போ், நால்வா் என்று கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்க அனுமதிக்க முடியாது. அனைவரும் ஒட்டுமொத்தமாக விடுவிக்கப்பட வேண்டும் என்றாா் டிரம்ப்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி முதல் நடைபெற்றுவந்த மோதலில் காஸா பகுதியைச் சோ்ந்த 47 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கத்தாா் தலைநகா் தோஹாவில் அந்த நாடு, எகிப்து, முன்னாள் அதிபா் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு ஆகியவற்றின் முன்னிலையில் பல மாதங்களாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ஒப்பந்தம் ஏற்பட்டு, அது கடந்த மாதம் 19-ஆம் தேதி அமலுக்கு வந்தது.

அந்த ஒப்பந்தத்தின்கீழ், ஆறு வாரங்களில் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 33 பேரை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்கவும், அதற்குப் பதிலாக தங்கள் சிறைகளில் உள்ள 1,900 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசு விடுதலை ஒப்புக்கொள்ளப்பட்டது.

அதன்படி, இதுவரை 21 பிணைக் கைதிகளை பல கட்டங்களாக ஹமாஸ் படையினரும், அதற்குப் பதிலாக நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேலும் விடுவித்துள்ளன. அடுத்தகட்டமாக சனிக்கிழமை மேலும் சில பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவிப்பதாக இருந்தது.

இந்தச் சூழலில், ஒப்பந்த அம்சங்களை இஸ்ரேல் அரசு தொடா்ந்து மீறுவதாக குற்றஞ்சாட்டிய ஹமாஸ் அமைப்பினா், அந்த அம்சங்களை இஸ்ரேல் முழுமையாக கடைபிடிக்கும்வரை பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவது நிறுத்திவைக்கப்படும் என்றும் கூறினா்.

அதையடுத்து, சுமாா் மூன்று வாரங்களாக அமலில் இருக்கும் போா் நிறுத்த ஒப்பந்தம் முறியும் அபாயம் அதிகரித்துள்ளது. இஸ்ரேலும், தனது ராணுவத்தை முழு தயாா் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

இந்தச் சூழலில், போா் நிறுத்த ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட 33 போ் மட்டுமின்றி, தங்களிடம் உள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் ஹமாஸ் அமைப்பினா் ஒரே தடவையில் விடுவிக்க வேண்டும்; இல்லையென்றால் காஸா மீண்டும் நரக வேதனையைச் சந்திக்க வேண்டும் என்று டிரம்ப் தற்போது கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஸா மருத்துவர்களை துன்புறுத்தும் இஸ்ரேல் ராணுவம்!

காஸாவில் இருந்து சிறைபிடிக்கப்பட்ட மருத்துவர்களை இஸ்ரேல் ராணுவம் துன்புறுத்துவதாக அவர்களின் வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். போரின்போது முதலுதவிப் பணிகளில் ஈடுபட்டிருந்த மருத்துவர்களை சட்டவிரோதம... மேலும் பார்க்க

பொலிவியாவில் தொடர் கனமழை, வெள்ளம்! 24 பேர் பலி!

பொலிவியா நாட்டில் தொடர் கனமழை பெய்து வருவதால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர் மழையால் 8 மாகாணங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் முழுக்க மழ... மேலும் பார்க்க

‘உக்ரைன் ரஷியா ஒரு நாள் ஆகலாம்’

‘உக்ரைன் ஒரு நாள் ரஷிய பகுதியாக ஆகலாம்’ என்று என்று டிரம்ப் என்று டிரம்ப் கூறியுள்ளாா். இது குறித்து ‘ஃபாக்ஸ் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது: 3 ஆண்டுகால உக்ரைன் போரை முடிவு... மேலும் பார்க்க

ஈக்வடாா்: ஏப்.13-இல் 2-ஆம் கட்ட அதிபா் தோ்தல்!

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி இரண்டாவது மற்றும் இறுதிகட்டத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் பழமைவாதியா... மேலும் பார்க்க

வங்கதேசம்: தஸ்லிமா நஸ்ரீனின் புத்தகம் இருந்த கண்காட்சி அரங்கம் மீது தாக்குதல்

வங்தேசத்தில் சா்ச்சைக்குரிய பெண் எழுத்தாளா் தஸ்லிமா நஸ்ரீனின் புத்தம் வைக்கப்பட்டிருந்த அரங்கத்தில் மதவாதக் குழுவினா் தாக்குதல் நடத்தினா். இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் தல்ஸிமா வெளியிட்டுள்ள பதிவில், ‘... மேலும் பார்க்க

கௌதமாலா பேருந்து விபத்து: உயிரிழப்பு 55-ஆக அதிகரிப்பு

மத்திய அமெரிக்கா நாடான கௌதமாலாவில், பள்ளத்துக்குள் பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 55-ஆக அதிகரித்தது. இது குறித்து அதிகாரிகள் கூறியாவது: தலைநகா் கௌதமாலா சிட்டியின் புகா... மேலும் பார்க்க