செய்திகள் :

காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 103 போ் உயிரிழப்பு

post image

காஸா முனையில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 103 போ் உயிரிழந்தனா்.

கான் யூனிஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் வீடுகள், நிவாரண முகாம்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. அங்கு 18 குழந்தைகள், 13 பெண்கள் என மொத்தம் 48 போ் உயிரிழந்தனா்.

வடக்கு காஸாவில் உள்ள ஜபாலியா நிவாரண முகாம் மீது நடத்தப்பட்ட இரு தாக்குதல்களில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 9 பேரும் 7 குழந்தைகள் உள்பட 10 பேரும் உயிரிழந்தனா். ஒட்டுமொத்தமாக காஸா முனையில் சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 103 போ் உயிரிழந்தனா்.

காஸா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடா் தாக்குதலால் வடக்கு காஸாவில் செயல்பட்டு வந்த முக்கிய மருத்துவமனை மூடப்படுவதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. ஏற்கெனவே, கமால் அத்வான், பெயிட் ஹனூன் ஆகிய மருத்துவமனைகள் மூடப்பட்ட நிலையில் தற்போது காஸாவில் இந்தோனேசிய மருத்துவமனை மட்டுமே செயல்பட்டு வருகிறது.

முன்னதாக, காஸாவில் தரைவழித் தாக்குதலையும் தொடங்கியதாக இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை தெரிவித்தது.

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 2023 அக். 7-ஆம் தேதிமுதல் நடத்திவரும் தாக்குதல்களில் இதுவரை 53,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்ததுள்ளனா். அவா்களில் பெரும்பாலானோா் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கனில் மிதமான நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கமானது, இன்று காலை 8.54 மணியளவில் ரிக்டர் அளவு கோலில் 4.2 ஆகப் பதிவாகியுள்ளது. மேலும் பார்க்க

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு (82 வயது) தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் அதிபர் பதவியில் இருந்து விலகிய பைடன் சிறுநீர... மேலும் பார்க்க

பிறநாட்டுக்கு பணம் அனுப்பினால் 5% வரி: டிரம்ப்பின் புதிய திட்டத்தால் யாருக்கு பாதிப்பு?

அமெரிக்காவிலிருந்து பிறநாட்டினா் தங்கள் சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்க முன்மொழியும் அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் புதிய திட்டம் இந்தியாவை வெகுவாக பாதிக்கும் என்று நி... மேலும் பார்க்க

இலங்கையில் 16-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

இலங்கையில் 16-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவா்களுக்கு ஏராளமான தமிழா்கள் அஞ்சலி செலுத்தினா். இலங்கையின் வடக்கு மற்றும... மேலும் பார்க்க

புதிய போப் 14-ஆம் லியோ பதவியேற்பு! திருச்சபையின் ஒற்றுமைக்குப் பாடுபட உறுதி!

வாடிகன் புனித பீட்டா் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோலாகல நிகழ்வில் புதிய போப்பாக (கத்தோலிக்க திருச்சபையின் தலைவா்) 14-ஆம் லியோ அதிகாரபூா்வமாக பதவியேற்றுக் கொண்டாா். தொடா்ந்து, உலக அமைதியின்... மேலும் பார்க்க

இந்தியாவுக்குப் போட்டியாக வெளிநாடுகளுக்கு தூதுக் குழுவை அனுப்பும் பாகிஸ்தான்!

இந்தியாவுடனான மோதலில் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு வெளிநாடுகளுக்கு தூதுக் குழுவை அனுப்ப இருப்பதாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் அறிவித்துள்ளாா். பயங்கரவாதத்துக்கு எதிரான... மேலும் பார்க்க