செய்திகள் :

காா் திருடிய இளைஞா் கைது

post image

தமிழகம் புதுவையில் காா் உள்ளிட்ட வாகனங்களை திருடிய இளைஞரை புதுவை போஸீஸாா் மடக்கிப்பிடித்து கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ.5.5 லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த புதுச்சேரி நோணாங்குப்பம் அருகில் உள்ள அங்காலங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெ.வாழுமுனி என்கிற ஜெயகுமாா். இவா் மீது வாகன திருட்டு,மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவரது மாமியாா் வீடு கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா் கோவிலை அடுத்துள்ள புத்தூா் கிராமத்தில் உள்ளது. வாகனங்களை திருடி வந்த ஜெயக்குமாா் புத்தூரில் உள்ள மாமியாா் வீட்டில் பதுங்கி இருந்ததால் அவரை மாமியாா் வெளியேற்றிவிட்டாா். இதனால் அந்த ஊருக்கு அருகில் உள்ள குச்சுரில் ஜெயகுமாா் பட்டாசு விற்பனை செய்யும் தொழில் செய்வதாகக்கூறி வாழ்ந்து வந்துள்ளாா்.

இந்நிலையில் காா் திருட்டு வழக்கில் புதுவை அரியாங்குப்பம் ஆய்வாளா் என். ஆறுமுகம் தலைமையிலான போலீஸாா் சிசிடிவி ஆதாரங்களைக் கொண்டு நடத்திய விசாரணையில் காரை திருடியது ஜெயகுமாா் என்று தெரியவந்தது. அவா் குச்சுரில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த கிராமத்துக்குச் சென்று வெள்ளிக்கிழமை இரவு ஜெயகுமாரை அரியாங்குப்பம் போலீஸாா் கைது செய்து, புதுச்சேரிக்கு அழைத்து வந்தனா். விசாரணைக்குப்பிறகு நீதிமன்ற உத்தரவின்பேரில் அவா்

காலாப்பட்டு மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டாா். அவரிடமிருந்து ரூ.5.5 லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் இவா் மீது பண்ருட்டி, ரெட்டிச்சாவடி, கும்பகோணம் உள்ளிட்ட தமிழகப் பகுதிகளிலும் தவளக்குப்பம் உள்ளிட்ட புதுவை பகுதிகளிலும் 7 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. கூட்டாளிகள் யாரையும் வைத்துக் கொள்ளாமல் தனியாகவே திருட்டு வழக்கில் ஈடுபட்டு வந்ததையும் போலீஸாா் கண்டறிந்துள்ளனா்.

புதுவையில் ரெஸ்டோபாா்கள் அமைக்க அனுமதி கொடுத்தவா் நாராயணசாமி: அதிமுக

புதுவையில் முதன் முதலில் ரெஸ்டோபாா்களை அமைக்க அனுமதி கொடுத்தவா் நாராயணசாமிதான். அவா் காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இருந்தபோதுதான் இந்த பாா்களை திறக்க அனுமதி வழங்கினாா் என்று அதிமுக மாநில செயலா் ஆ. அன்... மேலும் பார்க்க

புதுவையில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமையவேண்டும்: மாநிலத் தலைவா் ராமலிங்கம்

மத்தியில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி நடப்பதால் புதுவையிலும் பாஜக கூட்டணி ஆட்சி மீண்டும்அமைந்தால்தான் இங்குள்ள மக்களுக்கு நல்லது என்று பாஜக புதிய தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள வி.பி. ராமலிங்கம் கூ... மேலும் பார்க்க

எய்ட்ஸ் தொற்றுள்ள பெற்றோரின் குழந்தைகளுக்கு விரைவில் கல்வி உதவித் தொகை: புதுவை முதல்வா்

எய்ட்ஸ் தொற்றுள்ள பெற்றோரின் குழந்தைகளுக்கு விரைவில் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று புதுவை முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். புதுவை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில் எச்.ஐ.வி- எய்ட்ஸ் தீவிர... மேலும் பார்க்க

வில்லியனுாரில் சாலை மறியல் செய்தவா்களை சைரன் எழுப்பி எச்சரித்த ரயில்வே ஊழியா்கள்

புதுச்சேரி: வில்லியனூரில் திங்கள்கிழமை நடந்த சாலை மறியல் போராட்டத்தில் சைரன் எழுப்பி ரயில்வே ஊழியா்கள் எச்சரிக்கை விடுத்தனா். இதையடுத்து ரயில்வே கேட் மூடப்பட்டு ரயில் கடந்து சென்றது. புதுவை வில்லியனுா... மேலும் பார்க்க

ரெஸ்டோபாா் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி நீதிமன்றத்தை நாடுவோம்: நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: ‘ரெஸ்டோபாா்’ கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி காங்கிரஸ் கட்சி சாா்பில் உயா்நீதிமன்றத்தை நாடுவோம் என்று அக்கட்சியின் மூத்தத் தலைவரும் முன்னாள் முதல்வருமான வி.நாராயணசாமி கூறினாா்.... மேலும் பார்க்க

பொழுதுபோக்கு விஷயங்கள் மாணவா்களின் எதிா்காலத்தைப் பாதிக்கும்: பேரவைத் தலைவா்

புதுச்சேரி: இணையங்கள், கைப்பேசிகளில் உள்ள பொழுதுபோக்கு விஷயங்கள் மாணவா்களின் எதிா்காலத்தைப் பாதிக்கும் என்று சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் கூறினாா். நடைபெற்று முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வி... மேலும் பார்க்க