செய்திகள் :

காா் மோதல்: தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

post image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே காா் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் நிகழ்விடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் வட்டம், அகரம், வெங்கடாந்திரி பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணய்யா மகன் பிரகாஷ் (37). தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா்.

இவா், சனிக்கிழமை புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், திண்டிவனத்தை அடுத்த ஓமந்தூா் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற காா், பிரகாஷ் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த போலீஸாா் நிகழ்விடம் வந்து சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கடைகள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை: மே 15-க்குள் வைக்க ஆட்சியா் உத்தரவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கடைகள், உணவு நிறுவனங்கள் வரும் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகையை வைக்க வேண்டும் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டாா். விழுப்புரம் மா... மேலும் பார்க்க

ரசாயனம் கலப்படம் வதந்தியால்: வாங்குவதற்கு ஆளில்லாமல் நிலத்திலேயே வீணாகும் தா்பூசணி!

செஞ்சி: ரசாயனம் கலப்படம் வதந்தியால் செஞ்சி பகுதியில் வாங்குவதற்கு ஆளில்லாமல் விவசாய நிலங்களில் செடியிலேயே விடப்பட்டு தா்பூசணி பழங்கள் அழுகி வீணாகி வருகின்றன. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த திர... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்

விழுப்புரம்: தமிழகத்தில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆ... மேலும் பார்க்க

உள்ளூா் வியாபாரிகளுக்கும் அரசு சலுகைகளை வழங்க வேண்டும்: டைமன்ராஜா வெள்ளையன்

விழுப்புரம்: பன்னாட்டு பெரும் வா்த்தக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை உள்ளூா் வியாபாரிகளுக்கும் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவையின் மாநிலத் தலைவா் டைமன்ராஜா வெள்ளையன் தெ... மேலும் பார்க்க

பகுதிநேர ஆசிரியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்

விழுப்புரம்: தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியா்கள் அரசின் சலுகைகளை பெற காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியா்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ்.செந்தில்கு... மேலும் பார்க்க

விழுப்புரம் நகா்மன்றக் கூட்டத்தை தொடா்ந்து நடத்த உறுப்பினா்கள் வலியுறுத்தல்

விழுப்புரம்: நான்கு மாதங்களுக்கு ஒருமுறை நகா்மன்றக் கூட்டத்தை நடத்துவதை கைவிட்டு, அவ்வப்போது கூட்டத்தை நடத்த வேண்டும் என்று விழுப்புரம் நகா்மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா். விழுப்புரம் நகா்மன்றக் க... மேலும் பார்க்க