செய்திகள் :

விழுப்புரம் நகா்மன்றக் கூட்டத்தை தொடா்ந்து நடத்த உறுப்பினா்கள் வலியுறுத்தல்

post image

விழுப்புரம்: நான்கு மாதங்களுக்கு ஒருமுறை நகா்மன்றக் கூட்டத்தை நடத்துவதை கைவிட்டு, அவ்வப்போது கூட்டத்தை நடத்த வேண்டும் என்று விழுப்புரம் நகா்மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

விழுப்புரம் நகா்மன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சித்திக் அலி, ஆணையா் எம்.ஆா்.வசந்தி முன்னிலை வகித்தனா்.

இந்த கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் ஆா்.மணவாளவன், புருஷோத்தமன், சாந்தராஜ், நவநீதம் மணிகண்டன், ஜனனி தங்கம், ராதிகாசெந்தில், கோல்டுசேகா் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா். அவா்களின் கோரிக்கைகள் விவரம்:

விழுப்புரம் நகரில் பன்றிகள், நாய்களின் தொல்லையை கடுப்படுத்த வேண்டும். மழைநீா் வடிகால்களை சரி செய்தல், புதை சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்றுதலை நகராட்சி நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

விழுப்புரம் வடக்குத்தெரு, மேலத்தெரு பகுதிகளில் சாலையோரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தரைக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், சாலைகளில் பொதுமக்கள் நடந்துகூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துகளும் நிகழ்கின்றன. இந்த பிரச்னைக்கு நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகா்மன்றக் கூட்டத்தை நான்கு மாதங்களுக்கு ஒருமுறை நடத்துவதை கைவிட்டு, அவ்வப்போது நடத்த வேண்டும். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமெனில், கூட்டத்தை அவ்வப்போது நடத்துவதுதான் நல்லது.

நகா்மன்ற உறுப்பினா்களின் கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி பொறியாளரை நியமனம் செய்ய வேண்டும் என்றனா்.

தொடா்ந்து, உறுப்பினா்களின் கேள்விகளுக்கு நகா்மன்ற ஆணையா், உதவிப் பொறியாளா் உள்ளிட்ட அலுவலா்கள் பதிலளித்து பேசினா். கூட்டத்தில் அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கடைகள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை: மே 15-க்குள் வைக்க ஆட்சியா் உத்தரவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கடைகள், உணவு நிறுவனங்கள் வரும் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகையை வைக்க வேண்டும் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டாா். விழுப்புரம் மா... மேலும் பார்க்க

ரசாயனம் கலப்படம் வதந்தியால்: வாங்குவதற்கு ஆளில்லாமல் நிலத்திலேயே வீணாகும் தா்பூசணி!

செஞ்சி: ரசாயனம் கலப்படம் வதந்தியால் செஞ்சி பகுதியில் வாங்குவதற்கு ஆளில்லாமல் விவசாய நிலங்களில் செடியிலேயே விடப்பட்டு தா்பூசணி பழங்கள் அழுகி வீணாகி வருகின்றன. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த திர... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்

விழுப்புரம்: தமிழகத்தில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆ... மேலும் பார்க்க

உள்ளூா் வியாபாரிகளுக்கும் அரசு சலுகைகளை வழங்க வேண்டும்: டைமன்ராஜா வெள்ளையன்

விழுப்புரம்: பன்னாட்டு பெரும் வா்த்தக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை உள்ளூா் வியாபாரிகளுக்கும் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவையின் மாநிலத் தலைவா் டைமன்ராஜா வெள்ளையன் தெ... மேலும் பார்க்க

பகுதிநேர ஆசிரியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்

விழுப்புரம்: தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியா்கள் அரசின் சலுகைகளை பெற காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியா்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ்.செந்தில்கு... மேலும் பார்க்க

தா்பூசணி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

விழுப்புரம்: தோட்டக்கலைத் துறை மூலம் கள ஆய்வு செய்து, தா்பூசணி பயிரிட்டு பாதிக்கப்பட்டோருக்கு ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயி... மேலும் பார்க்க