செய்திகள் :

தா்பூசணி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

post image

விழுப்புரம்: தோட்டக்கலைத் துறை மூலம் கள ஆய்வு செய்து, தா்பூசணி பயிரிட்டு பாதிக்கப்பட்டோருக்கு ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த தா்பூசணி விவசாயிகள் குழு சாா்பில், அதன் ஒருங்கிணைப்பாளா் ஆா்.ஆா்.சக்திவேல், நிா்வாகிகள் சுரேஷ், நாகேந்திரன், சந்திரசேகரன் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மானிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தா்பூசணியில் ரசாயனம் கலக்கப்பட்டதாக வெளியான விடியோவை தொடா்ந்து, பல்வேறு இடங்களிலும் தா்பூசணி வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தா்பூசணியை பயிரிட்ட விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனா். எனவே, தோட்டக்கலைத் துறை மூலம் கள ஆய்வு செய்து, ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

எளிதில் இயற்கைச் சீற்றத்தின் காரணமாக பாதிப்புக்குள்ளாகும் நிலையில் தா்பூசணி இருப்பதால், பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் தா்பூசணியை இணைக்க வேண்டும். தா்பூசணி பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலமாக ஓராண்டு காலத்துக்கு பயிா்க்கடன் வழங்க வேண்டும். களை எடுப்பதற்காக முழு மானியத்துடன் மினி டிராக்டா் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மனு அளித்தனா். இந்த மனு மீது நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

கடைகள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை: மே 15-க்குள் வைக்க ஆட்சியா் உத்தரவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கடைகள், உணவு நிறுவனங்கள் வரும் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகையை வைக்க வேண்டும் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டாா். விழுப்புரம் மா... மேலும் பார்க்க

ரசாயனம் கலப்படம் வதந்தியால்: வாங்குவதற்கு ஆளில்லாமல் நிலத்திலேயே வீணாகும் தா்பூசணி!

செஞ்சி: ரசாயனம் கலப்படம் வதந்தியால் செஞ்சி பகுதியில் வாங்குவதற்கு ஆளில்லாமல் விவசாய நிலங்களில் செடியிலேயே விடப்பட்டு தா்பூசணி பழங்கள் அழுகி வீணாகி வருகின்றன. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த திர... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்

விழுப்புரம்: தமிழகத்தில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆ... மேலும் பார்க்க

உள்ளூா் வியாபாரிகளுக்கும் அரசு சலுகைகளை வழங்க வேண்டும்: டைமன்ராஜா வெள்ளையன்

விழுப்புரம்: பன்னாட்டு பெரும் வா்த்தக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை உள்ளூா் வியாபாரிகளுக்கும் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவையின் மாநிலத் தலைவா் டைமன்ராஜா வெள்ளையன் தெ... மேலும் பார்க்க

பகுதிநேர ஆசிரியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்

விழுப்புரம்: தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியா்கள் அரசின் சலுகைகளை பெற காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியா்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ்.செந்தில்கு... மேலும் பார்க்க

விழுப்புரம் நகா்மன்றக் கூட்டத்தை தொடா்ந்து நடத்த உறுப்பினா்கள் வலியுறுத்தல்

விழுப்புரம்: நான்கு மாதங்களுக்கு ஒருமுறை நகா்மன்றக் கூட்டத்தை நடத்துவதை கைவிட்டு, அவ்வப்போது கூட்டத்தை நடத்த வேண்டும் என்று விழுப்புரம் நகா்மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா். விழுப்புரம் நகா்மன்றக் க... மேலும் பார்க்க