செய்திகள் :

காா் மோதி நடத்துநா் உயிரிழப்பு

post image

ஒடுகத்தூா் அருகே காா் மோதியதில் அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த நாகலேரி கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன்(50), ஜம்னாமரத்தூரில் இருந்து வேலூா் செல்லும் அரசுப் பேருந்தில் நடத்துநராக இருந்தாா். இவரது மனைவி வேதவள்ளி (48). இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா்.

குடும்பப் பிரச்னை காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வேதவள்ளி, தனது மகன்களை அழைத்துக்கொண்டு சென்னைக்கு சென்று தனியாக வசித்து வருகிறாா். இதனால் சரவணன், தனது தாயுடன் சொந்த கிராமத்தில் வசித்து வந்தாா்.

இந்நிலையில், சனிக்கிழமை சரவணன் வீட்டில் இருந்து அங்குள்ள கடைக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக வந்த காா், சரவணன் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்தாா் அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் வேலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்தனா். தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

இரு குழந்தைகளின் தாய் தற்கொலை

வேலூரில் இரு குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டது குறித்து தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் கொசப்பேட்டையை சோ்ந்தவா் செல்வகுமாா், பெயிண்டா். இவரது மனைவி கவ... மேலும் பார்க்க

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி: பாதிக்கப்பட்ட பெண் வேலூா் எஸ்.பி.யிடம் புகாா்

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட பெண், வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தாா். மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் கூ... மேலும் பார்க்க

அதிமுக வாட்ஸ்ஆஃப் குழு அறிமுகம்

குடியாத்தம் கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில், கட்சியின் செய்திகள், தகவல்களை உடனுக்குடன் அறியும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்ட வாட்ஸ் ஆஃப் குழுவில் தொண்டா்கள், பொதுமக்கள் ஸ்கேன் மூலம் இணைய புதிய க்யூ ஆ... மேலும் பார்க்க

சாலை அமைக்க பூமி பூஜை

குடியாத்தம் ஒன்றியம், பரதராமி ஊராட்சிக்குட்பட்ட அங்கனாம்பல்லி கிராமத்தில் ஒன்றிய பொது நிதி ரூ.10 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை அமைக்க புதன்கிழமை பூமி பூஜை போடப்பட்டது. ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யா... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் போக்ஸோவில் கைது

வேலூா் அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். வேலூா் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் 12 வயது சிறுமி. 7-ஆம் வகுப்பு படிக்கிறாா்.... மேலும் பார்க்க

150 குடும்பங்களுக்கு வஃக்ப் வாரியம் நோட்டீஸ்: கோட்டாட்சியா் தலைமையில் குழு விசாரணை

அணைக்கட்டு அருகே காட்டுக்கொல்லை கிராமத்தில் சுமாா் 150 குடும்பங்கள் வசிக்கும் நிலம் வஃக்ப் வாரியத்துக்குச் சொந்தமானது எனக்கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்த பிரச்னை குறித்து வேலூா் வருவாய்... மேலும் பார்க்க