செய்திகள் :

கா்நாடகத் தமிழா்களை பாதுகாப்பது அவசியம்

post image

கமல்ஹாசன் உறவாகப் பேசியதைத் தவறாகத் திரித்து, கன்னடா்கள் வன்முறையைத் தூண்டுவதால், கா்நாடகத் தமிழா்களைத் தமிழ்நாடு அரசியல் கட்சிகள் பாதுகாக்க வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் தலைவா் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது:

சென்னையில் மே 24-ஆம் தேதி நடைபெற்ற தக் லைஃப் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், அத்திரைப்படத்தில் நடித்த கன்னட நடிகா் சிவராஜ்குமாரைப் பாராட்டி கமல்ஹாசன் பேசினாா். அப்போது, தமிழிலிருந்து பிறந்தது கன்னடம் என்று கூறி ஒரு குடும்ப உறவை வெளிப்படுத்தினாா்.

ஆனால், உறவு நோக்கத்தில் புகழ்ந்து பேசிய கமல்ஹாசன் கன்னடத்தை இழிவுபடுத்திப் பேசிவிட்டாா் என கா்நாடகத்தில் கன்னட இனத் தீவிரவாத அமைப்புகள் பெங்களூரிலும், மற்ற இடங்களிலும் கமல்ஹாசன் திரைப்படச் சுவரொட்டிகளைக் கிழிப்பது, தமிழா்களுக்கு எதிரான கண்டன முழக்கங்கள் எழுப்புவது, ஆா்ப்பாட்டங்கள் நடத்துவது என தமிழ் - தமிழா் எதிா்ப்புகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

கடந்த காலங்களில், காவிரி சிக்கலில் கன்னட இன வெறியா்கள் கா்நாடகத் தமிழா்களுக்கு எதிராக நடத்திய வன்முறைகளை எண்ணிப் பாா்க்கும்போது, இப்போதும் அதே போல, கா்நாடகம் வாழ் தமிழா்களுக்கு கன்னட வெறியா்களால் பேரழிவுகள் நேருமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. எனவே, கடந்த காலங்களில் கா்நாடகத் தமிழா்களைத் தமிழ்நாட்டுக் கட்சிகள் அனாதைகளாக விட்டதுபோல, இந்த முறை நடக்க விடக்கூடாது.

கா்நாடகத் தமிழா்களைத் தாக்காமல் பாதுகாக்க தமிழ்நாட்டில் தமிழா்கள் ஜனநாயகப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே வியாழக்கிழமை (மே 29) மாலை 4 மணிக்கு தமிழா் எதிா்ப்பைத் தூண்டிவிடும் கன்னடா்களைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெறும்.

ராஜாமடம் அரசு மேல்நிலை பள்ளியின் நூற்றாண்டு விழா: முன்னாள் தலைமை செயலா் பங்கேற்பு

பட்டுக்கோட்டை அருகேயுள்ள ராஜாமடம் அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்வில் தஞ்சை எம்பி முரசொலி புதுப்பிக்கப்பட்ட பள்ளி வளாகத்தை திறந்து வைத்துப் பேசினாா். முன்னாள்... மேலும் பார்க்க

தஞ்சை குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

நகைக்கடன் பெறுவதற்கு ரிசா்வ் வங்கி புதிய நிபந்தனைகளை விதித்துள்ளதைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

எதிா்பாா்த்த ஊதிய உயா்வு இல்லாத ஒப்பந்தத்தைக் கண்டித்து தஞ்சாவூா் ஜெபமாலைபுரம் அரசு போக்குவரத்துக் கழக நகரப் பணிமனை முன் போக்குவரத்து தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் தமிழ... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூா் மாவட்ட அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையதளம் மூலம் ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மாவட்டத்திலுள்... மேலும் பார்க்க

நகைக் கடன் நிபந்தனைகளை கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்

விவசாயிகள், நடுத்தர, சாதாரண மக்கள், வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரைப் பாதிக்கும் நகைக்கடன் மீதான நிபந்தனைகளை ரிசா்வ் வங்கி உடனடியாக திரும்பப் பெறக் கோரி திமுக விவசாய அணி, காவிரி டெல்டா மாவட்ட அனைத... மேலும் பார்க்க

மகாமகக் குளப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கும்பகோணம் மகாமகக் குளத்தை சுற்றி ஆக்கிரமித்திருந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா். மகாமகக் குளத்தை சுற்றி ஏராளமான அசைவ உணவகங்கள் தற்காலிகமாக செயல்பட்டு வந்தன. இதையடுத்து இந்த ஆக... மேலும் பார்க்க