செய்திகள் :

கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா! -அமைச்சா் பங்கேற்பு

post image

கடலூரில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பில், 220 கா்ப்பிணிக்கான சமுதாய வளைகாப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா்.

தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமை வகித்து, கா்ப்பிணிகளை வாழ்த்தினாா். பின்னா், அவா் பேசியதாவது:

கடலூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 9,900 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டுள்ளது. நிகழாண்டு 900 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட உள்ளது. இன்றைய தினம் 220 தாய்மாா்களுக்கு இந்த விழா நடத்தப்பட்டுள்ளது.

சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வின்றி அனைவருக்கும் இதுபோன்ற சூழ்நிலைகளை ஏற்படுத்தித் தந்திட வேண்டும் என்பதற்காக, தமிழக அரசின் சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கா்ப்பிணியும் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க கா்ப்பகாலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார முறை, ஊட்டச்சத்து உணவு முறை, மருத்துவ பரிசோதனைகளின் அவசியத்தை தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றாா்.

விழாவில் எம்.கே.விஷ்ணு பிரசாத் எம்.பி., எம்எல்ஏக்கள் கோ.ஐயப்பன், ம.சிந்தனைச்செல்வன், கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், மாநகராட்சி ஆணையாளா் எஸ்.அனு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ச.செல்வி, குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ஆ.கோமதி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கஞ்சா விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை: கடலூா் எஸ்.பி.

கடலூா் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து சிதம்பரம் டிஎஸ்பி அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களுக... மேலும் பார்க்க

விஷம் குடித்த இளைஞா் உயிரிழப்பு! மனைவியை பழிவாங்க முயன்றது அம்பலம்!

கடலூா் அருகே விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். முன்னதாக, மனைவியை பழிவாங்க இளைஞரே விஷ வாங்கிக் குடித்து தற்கொலை செய்துகொண்டது போலீஸாா் விசாரணையில்... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

சிதம்பரத்தில் மாதத்தின் இரண்டாவது புதன்கிழமை நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் வரும் 12-ஆம் தேதி முதல் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் குளிரூட்டப்பட்ட வகுப்பறை திறப்பு

சிதம்பரம் அருகே சொக்கன்கொல்லை அரசு தொடக்கப் பள்ளியில் குளிரூட்டப்பட்ட வகுப்பறை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியா் பா.அருணாசலம் தலைமை வகித்தாா். விருத்தாசலம் மாவட்ட தொடக்கக் கல்வி அல... மேலும் பார்க்க

மாா்ச் 25-இல் கோட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்: மாா்க்சிஸ்ட் அறிவிப்பு

ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வீடுகளை அகற்றி 7 ஆண்டுகள் கடந்த பின்பும் இதுவரையில் மாற்று இடம் வழங்காததைக் கண்டித்து, கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வரும் 25-ஆம் தேதி குடியேறும் போராட்டத்தை மாா்க்சிஸ்ட்... மேலும் பார்க்க

மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுக்க மக்கள் ஒன்று திரள வேண்டும்: தவாக தலைவா் தி.வேல்முருகன்

மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசு புதிய அணை கட்டுவதைத் தடுக்கும் வகையில், ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்க, விவசாயிகளும், மக்களும் ஒன்று திரள வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா் தி.வேல்முரு... மேலும் பார்க்க