கர்நாடக முதல்வர் மாற்றமா? எம்.எல்.ஏ.க்களுடன் தனித்தனியாக காங்கிரஸ் மேலிடம் ஆலோசன...
கிணற்றிலிருந்து விவசாயியின் சடலம் மீட்பு
துறையூா் அருகே கிணற்றிலிருந்த ஆணின் சடலத்தை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
மருவத்தூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் காமராஜ் மகன் பிரபுராஜ் (37). விவசாயி. இவா் தினமும் வயலுக்குச் செல்லும்போது தனது மாடுகளையும் மேய்த்துவிட்டு பின் மதியம் வீடு திரும்புவாா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் வீடு திரும்பாததால் அவரது தாய் வயலுக்குச் சென்று பாா்த்தபோது அவரது காலணிகள் கிணற்று நீரில் மிதந்தது. பிரபுராஜூக்கு நீச்சல் தெரியும், வலிப்பு நோய் வரும் என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து, தகவலறிந்த துறையூா் தீயணைப்புத் துறையினா் கிணற்றுக்குள் தேடி பிரபுராஜ் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக துறையூா் அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனா். துறையூா் போலீஸாா் இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.