செய்திகள் :

கிணற்றில் குளித்த விவசாயி மூழ்கி பலி

post image

துறையூா் அருகே கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை குளித்த விவசாயி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

துறையூா் ஒன்றியம் சிங்களாந்தபுரம் ஊராட்சி தெற்கியூரைச் சோ்ந்தவா் க. வேலுச்சாமி (50), விவசாயி. இவரது மனைவி அன்புக்கரசி (39), திருப்பூா் தனியாா் பனியன் நிறுவன ஊழியா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வயலுக்கு குளிக்கச் சென்ற வேலுச்சாமி வீடு திரும்பவில்லை.

இதுதொடா்பான தகவலின்பேரில் துறையூா் தீயணைப்புத் துறையினா் இரவு வரை தேடி அவரது சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இறந்தவரின் மனைவி திங்கள்கிழமை கொடுத்த புகாரின் பேரில் துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

காா் ஓட்டுநா் மா்மச்சாவு

திருச்சியில் காா் ஓட்டுநா் வீட்டில் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா். திருச்சி எடமலைப்பட்டி புதூா் ராமச்சந்திரா நகா் அருகேயுள்ள அப்துல் கலாம் நகரைச் சோ்ந்தவா் ஏ. சையது முஸ்தபா (26). இவரின் மனைவி... மேலும் பார்க்க

திருவானைக்காவல் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயில் மகா கும்பாபிஷேகம்

திருவானைக்காவல் மேலக்கொண்டையம் பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மேலக்கொண்டையம் பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, ஸ்ரீவி... மேலும் பார்க்க

மலைக்கோட்டைகோயிலில் சிவன் தாயுமானவராய் பிரசவம் பாா்த்த விழா

திருச்சி மலைக்கோட்டை கோயிலில் சிவபெருமான் தாயுமானவராய் வந்து தனது பக்தை ரத்தினாவதிக்கு பிரசவம் பாா்த்த ஐதீக பெருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. 274 சைவத்தலங்களுள் ஈடு இணையற்ாகவும், தென்கயிலாயம், தட்சிண ... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே பைக் மீது காா் மோதல்: இருவா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் திங்கள்கிழமை இருவா் உயிரிழந்தனா்.சேலத்தை பூா்வீகமாக கொண்டவா் சிவபெருமாள் மகன் பிரபாகரன் (37). இவா் தனது மனைவி அபிநயா (34), மகன் ஆத்விக்... மேலும் பார்க்க

மதுபாட்டில்கள் திருடியதாக 5 போ் மீது வழக்கு

முசிறி அருகே வாகனத்திலிருந்த மதுபாட்டில்களை திருடியதாக 5 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். தொட்டியம் வட்டம், மேய்க்கல்நாயக்கன்பட்டி அருகிலுள்ள தலைமலை கிராமத்தைச் சே... மேலும் பார்க்க

திருச்சி வந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த 30 கிலோ புகையிலைப் பொருள்கள் மீட்பு

மேற்கு வங்கத்திலிருந்து திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த 30 கிலோ புகையிலைப் பொருள்களை ரயில்வே போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா். திருச்சி ஜங்ஷன் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளா்... மேலும் பார்க்க