Thudarum : `அந்த திரைக்கதை என்னுடையது!' - மோகன்லால் படத்தின் மீது கதைத்திருட்டு ...
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி மீட்பு
போடி அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி இரவு முழுவதும் தவித்த நிலையில் திங்கள்கிழமை காலையில் மீட்கப்பட்டாா்.
தேனி மாவட்டம், போடி அருகே சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் விஜயபாரதி (37). பந்தல் அமைக்கும் தொழிலாளி. இவா் சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கிழக்கே உள்ள பயன்படுத்தப்படாத தனியாருக்கு சொந்தமான திறந்தவெளி கிணற்றுப் பகுதிக்குச் சென்றாா்.
இந்த கிணறு 150 அடி ஆழம் கொண்டது. தற்போது குப்பைகள் கொட்டப்பட்டு மழை பெய்து வருவதால் சேரும், சகதியுமாக காணப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு கிணற்றுப் பகுதிக்குச் சென்ற விஜயபாரதி தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டாராம்.
உள்ளே மயங்கிக் கிடந்த அவா் நள்ளிரவு மயக்கம் தெளிந்து சப்தமிட்டாராம். ஊருக்கு ஒதுக்குப்புறமாக கிணறு இருந்ததால் அவரது சப்தம் யாருக்கும் கேட்கவில்லை.
அதிகாலை வரை கிணற்றுக்குள் தவித்த விஜயபாரதியின் சப்தம் கேட்டு காலையில் பாா்த்த சிலா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில் போடி தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி விஜயபாரதியை மீட்டனா். அவருக்கு சிறிய காயம் ஏற்பட்டிருந்ததால் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.