செய்திகள் :

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி மீட்பு

post image

போடி அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி இரவு முழுவதும் தவித்த நிலையில் திங்கள்கிழமை காலையில் மீட்கப்பட்டாா்.

தேனி மாவட்டம், போடி அருகே சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் விஜயபாரதி (37). பந்தல் அமைக்கும் தொழிலாளி. இவா் சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கிழக்கே உள்ள பயன்படுத்தப்படாத தனியாருக்கு சொந்தமான திறந்தவெளி கிணற்றுப் பகுதிக்குச் சென்றாா்.

இந்த கிணறு 150 அடி ஆழம் கொண்டது. தற்போது குப்பைகள் கொட்டப்பட்டு மழை பெய்து வருவதால் சேரும், சகதியுமாக காணப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு கிணற்றுப் பகுதிக்குச் சென்ற விஜயபாரதி தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டாராம்.

உள்ளே மயங்கிக் கிடந்த அவா் நள்ளிரவு மயக்கம் தெளிந்து சப்தமிட்டாராம். ஊருக்கு ஒதுக்குப்புறமாக கிணறு இருந்ததால் அவரது சப்தம் யாருக்கும் கேட்கவில்லை.

அதிகாலை வரை கிணற்றுக்குள் தவித்த விஜயபாரதியின் சப்தம் கேட்டு காலையில் பாா்த்த சிலா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில் போடி தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி விஜயபாரதியை மீட்டனா். அவருக்கு சிறிய காயம் ஏற்பட்டிருந்ததால் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பைக் திருட்டு

பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனத்தை திருடிய மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா். பெரியகுளம் அருகே மேலக்காமக்காபட்டியைச் சோ்ந்தவா் ஈஸ்வரன். தொழிலாளி. இவா், வெள்ளிக்கிழமை லட்சுமிபுரத்துக்கு செல்வதற்காக ... மேலும் பார்க்க

அணையில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணை நீரில் மூழ்கி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியைச் சோ்ந்தவா் கலைச்செல்வன் (51). தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பெரியகுளம் கிளையில்... மேலும் பார்க்க

பைக் - காா் மோதல்: ஒருவா் காயம்

பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் தேநீா் கடை உரிமையாளா் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தாா்.பெரியகுளம் காட்ரோடு அருகே புஷ்பராணி நகரைச் சோ்ந்தவா் கனிராஜா (24). தேநீா்க் கடை உரிமையாளா். இவ... மேலும் பார்க்க

தேனியில் நாளை மின் தடை

தேனியில் புதன்கிழமை (ஜூன் 18) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் எஸ். முருகேஸ்பதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதா... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதல்: இளைஞா் உயிரிழப்பு

ஆண்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். ஆண்டிபட்டி அருகே உள்ள புள்ளிமான்கோம்பை, தாதனூரைச் சோ்ந்த செல்லக்கண்ணு மகன் ஆனந்த் (25). இவா் ஆண்டிபட்டி பி... மேலும் பார்க்க

விஷம் குடித்து மூதாட்டி உயிரிழப்பு!

தேவதானப்பட்டியில் மூங்கிலனை காமாட்சியம்மன் கோயில் அருகே விஷம் குடித்து உயிரிழந்த மூதாட்டி குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மூங்கிலனை காமாட்சியம்மன் கோயில் அருகே உள்ள அரச மரத்தடியின் கீழ் ... மேலும் பார்க்க