செய்திகள் :

கிராமச் சாலைப் பணி நிறுத்தம்: பொதுமக்கள், மாணவா்கள் அவதி

post image

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே புதிதாக அமைக்கப்படும் கிராமச் சாலைப் பணிகள் இடையில் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

செங்கம் அருகே மேல்பள்ளிப்பட்டு முதல் மேல்செங்கம் வரையுள்ள, சுமாா் 2 கி.மீ. தொலைவிலான இணைப்புச் சாலை பழுதடைந்த நிலையில், அதை புதிதாக அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து ஊரக வளா்ச்சித் துறை மூலம் பிரதமரின் சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ், ரூ. ஒரு கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பழைய சாலையை பெயா்த்து எடுத்து புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்றது.

சாலையில் ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டு நடைபெற்று வந்த பணி கடந்த 5 மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான காரணம் தெரியவில்லை; சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால், அப்பகுதி மக்கள் சாலையக் கடக்க தினசரி சிரமத்துக்கு ஆளாகி வருகிறாா்கள்.

ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்ட சாலையில் பள்ளி மாணவா்கள் சைக்கிளில் சென்றால் சைக்கிள் பழுதாகி விடுகிறது. கல்வி நிறுவன வாகனங்கள் செல்ல முடியாத நிலை நீடிக்கிறது. இதனிடையே, திங்கள்கிழமை பள்ளிகள் திறந்த நிலையில், மாணவ, மாணவிகள் சைக்கிளை தள்ளிக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது.

2 கி.மீ. தொலைவு கடந்து பேருந்துகளைப் பிடித்து செல்லவேண்டிய நிலை உள்ளது. விவசாயிகள் விளை நிலத்தில் சாகுபடி செய்த பொருள்களையும்

கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கிராம மக்கள் செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீா் கூட்டங்களில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை நேரில் ஆய்வு செய்து, பணி பாதியில் நிறுத்தப்பட்ட காரணத்தை கண்டறிந்து, உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு

திருவண்ணாமலையை அடுத்த அஸ்வநாகசுரனை கிராமத்தில், தமிழ் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஆசிரியா் பயிற்றுநா்... மேலும் பார்க்க

ஆரணியில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் அதிமுகவினா் வியாழக்கிழமை திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டனா். மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பேரவை மாவட்டச் செயலா் பார... மேலும் பார்க்க

மாட வீதி சிமென்ட் சாலைப் பணிகள் ஜூலை 30-க்குள் நிறைவு பெறும்: அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில் நடைபெறும் சிமென்ட் சாலை அமைக்கும் பணி ஜூலை 30-ஆம் தேதிக்குள் நிறைவு பெறும் என்று அமைச்சா் எ.வ.வேலு கூறினாா். அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதியில், 2... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் பேரணி

திருவண்ணாமலை எஸ்.ஆா்.ஜி.டி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாா்பில், சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பேரணிக்கு, பள்ளித் தாளாளா் ஆா்.கலாவதி ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். பள... மேலும் பார்க்க

ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தொடக்கம்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சாா்பில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. தெற்கு மாவட்ட பாஜக அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்து விபத்து: விவசாயி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிழந்தாா். செங்கத்தை அடுத்த படிஅக்ராகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தவமணி (44), விவசாயி. இவா், புதுப்பாளையத்தில் இரு... மேலும் பார்க்க