செய்திகள் :

கிராமப்புற சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு: நிதிஷ் குமார் அறிவிப்பு!

post image

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு நெருங்கியுள்ள நிலையில், கிராமப்புற சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தியுள்ளதாக அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நிதிஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

2025இல் அரசு அமைக்கப்பட்டதிலிருந்து சுகாதார சேவைகளை மேம்படுத்த நாங்கள் விரிவாகப் பணியாற்றி வருகிறோம்.

அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHA) மற்றும் மம்தா பணியாளர்கள் கிராமப்புறங்களில் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்கப் பங்கைக் கெண்டுள்ளனர்.

ஆஷா பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் ரூ. 1,000-க்கு பதிலாக ரூ. 3,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

மம்தா ஊழியர்களுக்கு பிரசவத்திற்கு ரூ.300 ஊக்கத்தொகை வழங்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 600 அதிகரிக்கும்.

முதல்வரின் அறிவிப்புக்குப் பதிலளித்த ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், மாநில சுகாதார அமைச்சராகத் தனது 17 மாத பதவிக்காலத்தில்ஆஷா மற்றும் மம்தா தொழிலாளர்களுக்கான ஊக்கத்தொகையை அதிகரிக்கும் செயல்முறையைத் தொடங்கியதாகக் கூறினார்.

இந்த மேம்படுத்தப்பட்ட ஊக்கத்தொகை அவர்களின் மன உறுதியை அதிகரிக்கும் மற்றும் கிராமப்புறங்களில் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

அரசின் ஏவல் படையா, அமலாக்கத் துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணாமுல் எம்.பி. கேள்வி!

அமலாக்கத் துறை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் ஏவல் படையாகச் செயல்படுவதாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலே குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்... மேலும் பார்க்க

குவைத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் தொழிலாளி! 45 நாள்கள் கழித்து தாயகம் வந்தடைந்த உடல்!

குவைத் நாட்டில் உயிரிழந்த ஜார்க்கண்டைச் சேர்ந்த தொழிலாளியின் உடல் 45 நாள்கள் கழித்து தாயகம் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தின், பந்த்காரோ கிராமத்தைச் சேர்... மேலும் பார்க்க

மீண்டும் ஏர் இந்தியா! தில்லி - லண்டன் விமானம் ரத்து! ஏன்?

தில்லியில் இருந்து லண்டன் புறப்பட தயாரான ஏர் இந்தியா விமானத்தின் பயணம், தொழில்நுட்பக் கோளாறினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தில்லியில் இருந்து லண்டன் நகரத்துக்குச் செல்ல, ஏர் இந்த... மேலும் பார்க்க

அந்தமான் நிகோபார் தீவில் முதன்முறையாக அமலாக்கத் துறை சோதனை! முன்னாள் எம்.பி.யின் மோசடி அம்பலம்?

அந்தமான் நிகோபார் தீவுகளில் கூட்டுறவு வங்கிகளில் மோசடியின் காரணமாக முதன்முறையாக அமலாக்கத் துறை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அந்தமான் நிகோபார் தீவுகளில் கூட்டுறவு வங்கிகளில் மோசடி நடத்தப்பட்டதாக அம்மாநி... மேலும் பார்க்க

நட்பினால் நஷ்டமா? மோடி - டிரம்ப் உறவு குறித்த கணிப்பு உண்மையானது!

உலகளவில் மிக முக்கிய மற்றும் பிரபலமான தலைவராக இருந்துவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையேயான வலுவான நட்புறவை உலக மக்களும் சரி, தலைவர்களும் எப்போதும் மெச்சி ... மேலும் பார்க்க

வருமான வரிக் கணக்கு தாக்கல்: கால அவகாசம் நீட்டிக்கப்படலாம்! காரணம் இதுதான்!!

தனிநபர் வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், அதற்கு இன்னமும் 45 நாள்களே இருக்கும் நிலையில், கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படலாம் எ... மேலும் பார்க்க