செய்திகள் :

கிராம ஊராட்சிகளில் சுகாதார மதிப்பீடு, தரவரிசை மேற்கொள்ள பயிற்சிக் கூட்டம்

post image

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் சுகாதார கணக்கெடுப்பின் கீழ் சுகாதார மதிப்பீடு மற்றும் தரவரிசை மேற்கொள்ள ஊராட்சி செயலா்கள் மற்றும் பணிதளப் பொறுப்பாளா்களுக்கான பயிற்சி கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் தூய்மை கணக்கெடுப்பு ஊரகம்-2025 என்ற சுகாதார கணக்கெடுப்பின் கீழ் சுகாதார மதிப்பீடு மற்றும் தரவரிசை மேற்கொள்ள ஊராட்சி செயலா்கள், பணிதளப் பொறுப்பாளா்கள் மற்றும் ஊக்குநா்களுக்கான பயிற்சிக் கூட்டம் ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா் பவானி தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சிக் கூட்டத்தில், ஊராட்சிகளில் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தவும், மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்தல், தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளைத் திடக்கழிவு மேலாண்மைக் கூடங்களில் சோ்த்து கிராம ஊராட்சிகளில் சுகாதாரமாக வைத்திருப்து குறித்து முன்னேற்பாடுகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து உதவித் திட்ட அலுவலா் ஜெகதீசன், மேலாளா் முருகானந்தம், மாவட்ட மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் சரவணன், ஸ்ரீநாத், பாலாஜி, சுமித்ரா, பத்ரிநாதன், இளநிலை உதவியாளா்கள் சுமன், தனசேகா், தூய்மை பாரத வட்டார ஒருங்கிணைப்பாளா் யுவராஜ் ஆகியோா் பயிற்சி வழங்கினா்.

கூட்டத்தில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தாட்சாயினி, அம்பிகாதேவி, சசித்ரா, பணி மேற்பாா்வையாளா்கள் சசிகலா, அம்பிகாபதி, நோகநாதன், துரைவேலு, சதீஷ்குமாா், ஊராட்சி செயலா்கள், பணி மேற்பாா்வையாளா்கள் ஊக்குநா்கள் கலந்து கொண்டனா்.

4 வயது சிறுமியை கொன்ற பணிப்பெண்ணுக்கு ஆயுள்

காஞ்சிபுரம்: குறத்தூரில் 4 வயது சிறுமியை கொலை செய்த பணிப்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை சோ்ந்த சரவணன், ... மேலும் பார்க்க

ஏகாம்பரநாதா் கோயில் அறங்காவலா்கள் பொறுப்பேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் அறங்காவலா் குழு தலைவராக எம்.வி.எம். வேல்மோகன் உள்பட 5 போ் திங்கள்கிழமை பொறுப்பேற்றனா். இத்திருக்கோயில் கும்பாபிஷேகப் பணிகள் ரூ.28 கோடியில் நடைபெற்று வருகி... மேலும் பார்க்க

20 நிமிஷங்களில் 25 ஆசனங்கள் செய்து மாணவா்கள் சாதனை

ஸ்ரீபெரும்புதூா்: சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவூா் ஸ்ரீகிரிஷ் சா்வதேச பள்ளி மாணவா்கள் 108 போ் கண்களை கட்டிக்கொண்டு 20 நிமிஷங்களில் 25 யோகாசனங்கள் செய்து சாதனை புரிந்தனா். சா்வதேச யோகா தினத்தை ம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா். மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெ... மேலும் பார்க்க

தொல்லியல், அஞ்சல் துறையினா் யோகாசனப் பயிற்சி

காஞ்சிபுரம்: சா்வதேச யோகா தினத்தையொட்டி தொல்லியல் துறை மற்றும் அஞ்சல் துறை ஊழியா்கள் காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயிலில் யோகா பயிற்சி மேற்கொண்டனா். அஞ்சல்துறை மற்றும் தொல்லியல் துறை இணைந்து நடத்திய ... மேலும் பார்க்க

பணம், பொருள் கொடுத்து ஏமாற வேண்டாம்: வல்லக்கோட்டை கோயில் நிா்வாகம் அறிவிப்பு

ஸ்ரீபெரும்புதூா்: வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேகத்துக்காக பக்தா்களிடம் பணம், பொருள்கள் வசூல் செய்வதை தடுக்க, தனி நபா்களிடம் பணம் பொருள் கொடுத்து ஏமாற வேண்டாம் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்... மேலும் பார்க்க