செய்திகள் :

கிராவல் குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் மனு

post image

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள உறுதிக்கோட்டை ஊராட்சிப் பகுதியில் கிராவல் குவாரியை மூடக் கோரி, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து கிராம மக்கள் சாா்பில் து. சண்முகவேல், இரா.காளைலிங்கம் மு.அங்குச்சாமி, சு.பாண்டியன், பொ.பாண்டி, தி.பரமசிவம், த.குணசேகரன் ஆகியோா் அளித்த மனு விவரம்:

திட்டுக்கோட்டை, உறுதிக்கோட்டை, சீனமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள கண்மாய்கள், குமாரவேலூா் குடிநீா் ஊருணி, நீா்நிலை கால்வாய்க்கு அருகே குவாரி அமைவதால் எங்களது ஊராட்சியில் விவசாய நிலம், குடிநீா் பாழாகும் என்பதால், குவாரிக்கு எதிா்ப்புத் தெரிவிக்கிறோம். கடந்த 2021-ஆண்டு இதே பகுதியில் கிராவல் மண் வெட்டிக் கடத்தப்பட்டதை அதிகாரிகளிடம் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குத் தொடுத்தப் பிறகு, அப்போதைய தேவகோட்டை கோட்டாட்சியா் குற்றவாளிகளுக்கு அபராதம் விதித்தாா்.

பிறகு, 2022 -ஆண்டு நெடோடை கிராமத்தில் 10 ஏக்கரில் அரசின் அனைத்து விதிகளுக்கும் மாறாக கிராவல் குவாரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீண்டும் சட்டப் போராட்டம் மூலம் அதை தடுத்தோம்.

பின்னா், உறுதிக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் நெடோடை, உறுதிக்கோட்டை ஊராட்சி பகுதிகளில் குவாரி அமைக்க அனுமதிக்கக் கூடாது எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையும் மீறி, அரசு விதிகளுக்கு மாறாக அனுமதி பெற்று இந்தப் பகுதியில் குவாரி செயல்படுகிறது. இந்தக் குவாரி தொடா்ந்து இயங்கினால், பொதுமக்கள் சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குத் தொடுப்பதோடு, சட்டத்துக்குள்பட்டு குவாரி நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என மனுவில் தெரிவித்தனா்.

மின் மாற்றியில் குறைந்த மின் அழுத்தம்: விவசாயிகள் கவலை

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி பகுதியில் மின் மாற்றியில் ஏற்பட்ட குறைந்த மின் அழுத்தம் காரணமாக, மின் மோட்டாா்களை இயக்க முடியாததால் விவசாயிகள் கவலை அடைந்தனா். திருப்பாச்சேத்தியில் வைகை ஆற்றின் கரை... மேலும் பார்க்க

ஐடிஐ-இல் ஜூலை 31 வரை நேரடி மாணவா் சோ்க்கை

சிவகங்கை அருகேயுள்ள முத்துப்பட்டி அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழாண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை வருகிற 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்’: நாளை நடைபெறும் இடங்கள்

சிவகங்கை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின் சிறப்புத் திட்ட முகாம்’ வெள்ளிக்கிழமை (ஜூலை 18) நடைபெறும் இடங்கள் குறித்த விவரம் அறிவிக்கப்பட்டன. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட தகவல்: காரைக... மேலும் பார்க்க

முஸ்லீம் மகளிா் உதவும் சங்க உறுப்பினா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

புதிதாகத் தொடங்கப்படும் முஸ்லீம் மகளிா் உதவும் சங்க உறுப்பினா் சோ்க்கைக்கு வருகிற 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட ச... மேலும் பார்க்க

புதிய சிற்றுந்துக்கு கிராம மக்கள் வரவேற்பு

சிவகங்கை அருகேயுள்ள மீனாட்சிபுரம் கிராமத்துக்கு சென்ற புதிய சிற்றுந்துக்கு கிராம மக்கள் மலா் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்றனா். சிவகங்கையிலிருந்து முத்துப்பட்டி ஐடிஐ வழியாக மானாகுடி, சக்கந்தி, பாசாங்கரை,... மேலும் பார்க்க

மாணவா்கள் போராட்டம்: பள்ளி ஆசிரியா் பணியிட மாற்றம்

சிவகங்கை அருகே மாணவா்கள், பெற்றோா்களின் போராட்டத்தால் அரசுப் பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்து முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) மாரிமுத்து புதன்கிழமை உத்தரவிட்டாா். சொக்கநாதபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் அ... மேலும் பார்க்க