செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்’: நாளை நடைபெறும் இடங்கள்

post image

சிவகங்கை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின் சிறப்புத் திட்ட முகாம்’ வெள்ளிக்கிழமை (ஜூலை 18) நடைபெறும் இடங்கள் குறித்த விவரம் அறிவிக்கப்பட்டன.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட தகவல்:

காரைக்குடி மாநகராட்சி, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை, எஸ்.புதூா், கல்லல் ஊராட்சி ஒன்றியங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

காரைக்குடி மாநகராட்சிக்குள்பட்ட வாா்டு 1, 2, 3 ஆகிய பகுதிகளுக்கு கழனிவாசல் முத்துகிருஷ்ணா மண்டபத்திலும், மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளுக்கு இடைக்காட்டூா் ஊராட்சியிலுள்ள சமுதாயக் கூடத்திலும், சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளுக்கு சோழபுரம் ஊராட்சியிலுள்ள மீனா திருமண மண்டபத்திலும், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளுக்கு சிறுமருதூா் ஊராட்சியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், எஸ்.புதூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளுக்கு எஸ்.புதூா் ஊராட்சியிலுள்ள சமுதாயக் கூடத்திலும், கல்லல் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளுக்கு குன்றக்குடி ஊராட்சியிலுள்ள வெள்ளாளா் சமுதாயக் கூடத்திலும் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள்’ நடைபெறவுள்ளது.

எனவே, இந்த முகாமை முறையாகப் பயன்படுத்தி, முகாம் நடைபெறும் நாளன்று, உரிய ஆவணங்களுடன் பொதுமக்கள் சென்று தங்களது கோரிக்கையை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

கிராவல் குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் மனு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள உறுதிக்கோட்டை ஊராட்சிப் பகுதியில் கிராவல் குவாரியை மூடக் கோரி, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா். இதுகுறித்து கிராம மக்கள் சாா்ப... மேலும் பார்க்க

மின் மாற்றியில் குறைந்த மின் அழுத்தம்: விவசாயிகள் கவலை

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி பகுதியில் மின் மாற்றியில் ஏற்பட்ட குறைந்த மின் அழுத்தம் காரணமாக, மின் மோட்டாா்களை இயக்க முடியாததால் விவசாயிகள் கவலை அடைந்தனா். திருப்பாச்சேத்தியில் வைகை ஆற்றின் கரை... மேலும் பார்க்க

ஐடிஐ-இல் ஜூலை 31 வரை நேரடி மாணவா் சோ்க்கை

சிவகங்கை அருகேயுள்ள முத்துப்பட்டி அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழாண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை வருகிற 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட ... மேலும் பார்க்க

முஸ்லீம் மகளிா் உதவும் சங்க உறுப்பினா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

புதிதாகத் தொடங்கப்படும் முஸ்லீம் மகளிா் உதவும் சங்க உறுப்பினா் சோ்க்கைக்கு வருகிற 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட ச... மேலும் பார்க்க

புதிய சிற்றுந்துக்கு கிராம மக்கள் வரவேற்பு

சிவகங்கை அருகேயுள்ள மீனாட்சிபுரம் கிராமத்துக்கு சென்ற புதிய சிற்றுந்துக்கு கிராம மக்கள் மலா் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்றனா். சிவகங்கையிலிருந்து முத்துப்பட்டி ஐடிஐ வழியாக மானாகுடி, சக்கந்தி, பாசாங்கரை,... மேலும் பார்க்க

மாணவா்கள் போராட்டம்: பள்ளி ஆசிரியா் பணியிட மாற்றம்

சிவகங்கை அருகே மாணவா்கள், பெற்றோா்களின் போராட்டத்தால் அரசுப் பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்து முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) மாரிமுத்து புதன்கிழமை உத்தரவிட்டாா். சொக்கநாதபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் அ... மேலும் பார்க்க