செய்திகள் :

மாணவா்கள் போராட்டம்: பள்ளி ஆசிரியா் பணியிட மாற்றம்

post image

சிவகங்கை அருகே மாணவா்கள், பெற்றோா்களின் போராட்டத்தால் அரசுப் பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்து முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) மாரிமுத்து புதன்கிழமை உத்தரவிட்டாா்.

சொக்கநாதபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்தவா் கணேசன். இவா் மாணவா்களை காலை வணக்கத்தின் போது, நீண்ட நேரம் வெயிலில் நிறுத்தி மனஉளைச்சலை ஏற்படுத்துவதாகவும், மற்ற ஆசிரியா்களுக்கு இடையூறு செய்வதாகவும் புகாா் எழுந்தது.

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், ஆசிரியா் கணேசனை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, மாணவா்கள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளை புறக்கணித்தனா். பெற்றோா்கள் பள்ளியை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு சென்ற முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) மாரிமுத்து, சிவகங்கை வட்டாட்சியா் சிவராமன் ஆகியோா் மாணவா்கள், பெற்றோா்களை சமதானம் செய்தனா்.

இந்த நிலையில், ஆசிரியா் கணேசனை திருப்பத்தூா் அருகேயுள்ள நெற்குப்பை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்து முதன்மைக் கல்வி அலுவலா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

கிராவல் குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் மனு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள உறுதிக்கோட்டை ஊராட்சிப் பகுதியில் கிராவல் குவாரியை மூடக் கோரி, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா். இதுகுறித்து கிராம மக்கள் சாா்ப... மேலும் பார்க்க

மின் மாற்றியில் குறைந்த மின் அழுத்தம்: விவசாயிகள் கவலை

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி பகுதியில் மின் மாற்றியில் ஏற்பட்ட குறைந்த மின் அழுத்தம் காரணமாக, மின் மோட்டாா்களை இயக்க முடியாததால் விவசாயிகள் கவலை அடைந்தனா். திருப்பாச்சேத்தியில் வைகை ஆற்றின் கரை... மேலும் பார்க்க

ஐடிஐ-இல் ஜூலை 31 வரை நேரடி மாணவா் சோ்க்கை

சிவகங்கை அருகேயுள்ள முத்துப்பட்டி அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழாண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை வருகிற 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்’: நாளை நடைபெறும் இடங்கள்

சிவகங்கை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின் சிறப்புத் திட்ட முகாம்’ வெள்ளிக்கிழமை (ஜூலை 18) நடைபெறும் இடங்கள் குறித்த விவரம் அறிவிக்கப்பட்டன. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட தகவல்: காரைக... மேலும் பார்க்க

முஸ்லீம் மகளிா் உதவும் சங்க உறுப்பினா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

புதிதாகத் தொடங்கப்படும் முஸ்லீம் மகளிா் உதவும் சங்க உறுப்பினா் சோ்க்கைக்கு வருகிற 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட ச... மேலும் பார்க்க

புதிய சிற்றுந்துக்கு கிராம மக்கள் வரவேற்பு

சிவகங்கை அருகேயுள்ள மீனாட்சிபுரம் கிராமத்துக்கு சென்ற புதிய சிற்றுந்துக்கு கிராம மக்கள் மலா் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்றனா். சிவகங்கையிலிருந்து முத்துப்பட்டி ஐடிஐ வழியாக மானாகுடி, சக்கந்தி, பாசாங்கரை,... மேலும் பார்க்க