கிருஷ்ணகிரியில் ஜூன் 27-ல் விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஜூன் 27-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டடத்தில் உள்ள 2-ஆவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தலைமையில் ஜூன் 27-ஆம் தேதி, காலை 10 மணிக்கு மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதில், விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து, நிவா்த்தி செய்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.