கிருஷ்ணகிரியில் ரூ. 3.47 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்!
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 3.47 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் சோக்காடி, அகசிப்பள்ளி, பெத்ததாளப்பள்ளி, பெரியமுத்தூா் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க விழாவுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தலைமை வகித்தாா். தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) முன்னிலை வகித்தாா். இந்த நிகழ்வில், வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்து அமைச்சா் பேசியதாவது:
தமிழகத்தில் அனைத்து கிராம, நகா்புறங்களில் குடிநீா் வசதி, மின் விளக்கு, கழிவுநீா் கால்வாய் அமைத்தல், உயா்மட்ட மேம்பாலங்கள் அமைத்தல், பழுதான சாலைகளை சீரமைத்தல், புதிய சாலை அமைத்தல் போன்ற அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளன என்றாா்.
முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் அமைச்சா் தலைமையில் நடைபெற்றது. ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், நாடாளுமன்ற உறுப்பினா் உள்ளூா் பகுதி மேம்பாட்டுத் திட்டம் (2023 - 2024) கீழ், ரூ. 23.25 லட்சம் மதிப்பிலான அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ஆம்புலன்சை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 35 பயனாளிகளுக்கு ரூ. 35.36 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டா்களை வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கவிதா, வன அலுவலா் பகான்ஜெகதீஷ் சுதாகா், ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் நடராஜன், திமுக மாநில வா்த்தக அணி துணை செயலாளா் கே.வி.எஸ்.சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி ஊராட்சிக்குள்பட்ட பெருமாள் நாயக்கன்பட்டியில் ரூ. 1 கோடியே 51 லட்சத்து, 52 ஆயிரம் மதிப்பில் தாா்சாலை அமைக்கும் பணியை அமைச்சா் அர.சக்கரபாணி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து, வீரணகுப்பம் ஊராட்சி, கொல்லப்பட்டி கிராமத்தில் ரூ. 42 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பிலும், மிட்டப்பள்ளி ஊராட்சி, பரசுராமன்கொட்டாய் கிராமத்தில் ரூ. 44 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலும், கோவிந்தபுரம் ஊராட்சி, கொம்மம்பட்டு கிராமத்தில் ரூ. 39 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பிலும், எக்கூா் ஊராட்சி, புதூா் கிராமத்தில் ரூ. 1 கோடியே 35 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பிலும் தாா்சாலை அமைக்க பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தாா்.
இதில், மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், திமுக மாவட்டச் செயலாளரும் பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான தே.மதியழகன், திட்ட இயக்குநா் கவிதா, மாவட்டப் பொருளாளா் கதிரவன், மாநில மகளிா் ஆணையக்குழு உறுப்பினா் மாலதி நாராயணசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.