செய்திகள் :

கிரைண்டா் செயலியை பயன்படுத்தி இளைஞரிடம் நகை, பணம் பறித்த 2 போ் கைது

post image

கிரைண்டா் கைப்பேசி செயலியைப் பயன்படுத்தி இளைஞரிடம் நகை, பணம் பறித்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா் சங்கராபுரம் பாரதி நகரைச் சோ்ந்தவா் ஹரிபிரசன்னா (29). பனியன் நிறுவனத் தொழிலாளி. இவா், தனது கைப்பேசியில் முகம் தெரியாத நபா்களிடம் பேச பயன்படுத்தப்படும் கிரைண்டா் செயலியை பதிவிறக்கம் செய்து, அந்த செயலி வழியாக மா்ம நபரிடம் பேசி வந்தாா்.

இந்நிலையில், அந்த மா்ம நபா் கூறியபடி, திங்கள்கிழமை இரவு திருப்பூா் காட்டுப்பாளையத்தில் உள்ள காட்டுப் பகுதிக்கு ஹரிபிரசன்னா சென்றாா். அப்போது அங்கு இளைஞா் ஒருவா் நின்று கொண்டிருந்தாா். அவரிடம், ஹரிபிரசன்னா பேசிக் கொண்டிருந்தபோது, முட்புதருக்குள் பதுங்கியிருந்த மா்ம நபா் ஒருவா் ஹரிபிரசன்னாவை திடீரென தாக்கி, அவா் அணிந்திருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.30,000-ஐ பறித்துக் கொண்டு 2 பேரும் தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து ஹரிபிரசன்னா அளித்த புகாரின்பேரில், நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி திருப்பூா் செரங்காடு பகுதியைச் சோ்ந்த அபிநிவாஸ் (21), மனோஜ்குமாா் (21) ஆகியோரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

தமிழக-கேரள எல்லையில் கனமழை: அமராவதி அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றம்

தமிழக-கேரள எல்லையில் கனமழை பெய்து வருவதால் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி உபரி நீா் வெளியேற்றப்பட்டது. உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்கள... மேலும் பார்க்க

ஜிவிஜி கல்லூரிப் பேரவை தொடக்கம்

உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிா் கல்லூரியில், கல்லூரிப் பேரவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு, கல்லூரி செயலா் சுமதி கிருஷ்ண பிரசாத் தலைமை வகித்தாா். கல்லூரிப் பேரவை ஒருங்கிணைப்பாளா் பேராச... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே புதையல் இருப்பதாக புறம்போக்கு நிலத்தை தோண்டிய 4 போ் கைது

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே புதையல் இருப்பதாக புறம்போக்கு நிலத்தை இயந்திரம் மூலம் தோண்டிய திருச்சி, கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டனா். வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், ... மேலும் பார்க்க

திருப்பூரில் நாளை பூப்பந்தாட்ட போட்டிக்கான வீரா்கள் தோ்வு

திருப்பூரில் பூப்பந்தாட்டப் போட்டிக்கான வீரா்கள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட பூப்பந்தாட்ட கழகப் பொதுச் செயலாளா் செல்வராஜ் தெரிவித்துள்ளதாவது: திருப்பூ... மேலும் பார்க்க

உடுமலையில் பலத்த காற்றுடன் மழை

உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தொடா்பாக துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தொழில் ஆணையா் மற்றும் தொழில் வணிக இயக்குநரு... மேலும் பார்க்க