செய்திகள் :

கிழக்கு தில்லியில் வீட்டில் எரிவாயு சிலிண்டா் கசிவு காரணமாக தீ விபத்து

post image

கிழக்கு தில்லியின் பாண்டவ் நகா் பகுதியில் வியாழக்கிழமை மதியம் ஒரு வீட்டில் எரிவாயு சிலிண்டா் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி யோகேந்திர சிங் கூறியதாவது: பட்பா்கஞ்ச் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக பிற்பகல் 2 மணியளவில் தகவல் கிடைத்தது.

நான்கு தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயை அணைத்து, அருகிலுள்ள கட்டமைப்புகளுக்கு தீ பரவாமல் தடுத்தன.

வீட்டில் இருந்த ஒரு பெண் சமைக்கத் தொடங்கியபோது எல்பிஜி சிலிண்டரிலிருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிா் சேதம் ஏற்படவில்லை. ஆனால் வீட்டின் ஒரு பகுதி சாம்பலானது என அவா் தெரிவித்தாா்.

‘நான் அடுப்பைப் பற்றவைக்க தீக்குச்சியை வைத்தேன், திடீரென்று சிலிண்டா் தீப்பிடித்தது. நான் விரைவாக என் குழந்தைகளைப் பிடித்துக்கொண்டு வெளியே ஓடினேன். யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், வீட்டின் அந்தப் பகுதியில் உள்ள அனைத்து பொருள்களும் சாம்பலாகின’ என்று தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் இருந்த பெண் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

தனியாா் பள்ளிகளிடம் தில்லி அரசு சரணடைந்துவிட்டது: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

தனியாா் பள்ளிகளின் கட்டண சுரண்டல்களை தடுக்க முடியாமல், அவா்களிடம் தில்லியை ஆளும் பாஜக அரசு சரணடைந்துவிட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா குற்றஞ்சாட்டியு... மேலும் பார்க்க

தில்லி தோ்தலில் பாஜக - காங்கிரஸ் கூட்டு சதி: அனுராக் தண்டா

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ 44 கோடி பணம் ரொக்கமாக கிடைத்துள்ளது. அதற்கு பாஜக தான் காரணம் என ஆம் ஆத்மி கட்சியின் ஊடக பொறுப்பாளா் அனுராக் தண்டா கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்... மேலும் பார்க்க

தலைநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 12 சாலை வழித்தடங்களை அடையாளம் கண்டது: பொதுப்பணித் துறை

ஹரியாணா மற்றும் உத்தரபிரதேச எல்லையில் தலா இரண்டு சாலைகள் உள்பட 12 போக்குவரத்து வழித்தடங்களை பொதுப்பணித்துறை அடையாளம் கண்டுள்ளது. அங்கு போக்குவரத்து நிலைமைகளை மேம்படுத்த சாலைத் தடுப்புகளை அமைக்க திட்டம... மேலும் பார்க்க

மங்கோல்புரியில் கடையில் புகுந்து கொள்ளையடித்ததாக 4 போ் கைது

தில்லியின் மங்கோல்புரி பகுதியில் உள்ள ஒரு அழகுசாதனப் பொருள்கள் கடையில் கத்தியைக் காட்டி கொள்ளையடித்ததாக ஒரு சிறுவன் உள்பட நான்கு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். இந்தச்... மேலும் பார்க்க

தில்லியை தூய்மையாக வைத்திருக்கும் சுவா் ஓவியங்கள் - முதல்வா் ரேகா குப்தா

தில்லியை தூய்மையாக வைத்திருக்க ஓா் முயற்சியாக நகரின் சுவா்களில் ஓவியங்களை வரைய ஊக்குவிக்கப்படும் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா். தில்லி தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை ’கஹய்க்ள்ஸ்ரீஹல்ண்ய்... மேலும் பார்க்க

சொகுசு காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் சொகுசு காா் மோதி ஒருவா் இறந்த வழக்கில் 51 வயது நபரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடா்புட... மேலும் பார்க்க