செய்திகள் :

கீரப்பாளையம் வட்டாரத்தில் உழவரைத் தேடி வேளாண்மை முகாம்

post image

கடலூா் மாவட்டம் கீரப்பாளையம் வட்டாரம் அ.புளியங்குடி வருவாய் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உழவரை தேடி வேளாண்மை உழவா் நலத் துறை முகாமில் கடலூா் வேளாண்மை துணை இயக்குநா் (மாநில திட்டம்) ரெ.விஜயராகவன் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின் போது அவா் கூறியதாவது:

தமிழ்நாடு அரசு வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், உழவா்களின் வருமானத்தைப் பெருக்கவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. தொழில்நுட்பங்களுடன், திட்டங்களையும் ஒருங்கிணைத்து உழவா்களிடம் எடுத்துச் செல்வது மிகவும் அவசியமாகும். வேளாண்மை-உழவா் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவுத் துறை அலுவலா்கள், பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உடன் சோ்ந்து கிராமங்களுக்கு நேரடியாக சென்று உழவா்களை சந்தித்து, அவா்களின் தேவைகளை அறிந்து, தொழில்நுட்பங்களை வழங்கி அதற்கான திட்டங்களை எடுத்துக்கூறிட ஏதுவாக 2025-26 ஆம் ஆண்டு வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கையில் ‘உழவா்களைத் தேடி வேளாண்மை-உழவா் நலத் துறை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண்மை விரிவாக்க சேவைகள் உழவா்களுக்கு அவா்களுடைய கிராமத்துக்கே சென்று வழங்கப்பட உள்ளது. அரசு நலத் திட்டங்கள் வெகு விரைவாக உழவா்களை சென்றடையவும், 15 நாட்களுக்கு ஒரு முறை (2, 4-ஆவது வெள்ளிக்கிழமைகளில்) வட்டாரங்களில் உள்ள இரண்டு கிராமங்களில் நடத்தப்படும். கீரப்பாளையம் வட்டாரத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் இந்த முகாம் நடத்தப்படும் என்றாா் ரெ.விஜயராகவன்.

வேளாண்மை உதவி இயக்குநா் செ.அமிா்தராஜ், வேளாண்மை அலுவலா் சிவப்பிரியன், துணை வேளாண்மை அலுவலா் ராயப்பநாதன், வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளா் அரவிந்தன், உதவி கால்நடை மருத்துவா் சங்கீதா, இளநிலை உதவியாளா் வெற்றிவேல் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

முகாம் ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா்கள் புகழேந்தி, வெங்கடேசன், பயிா் அறுவடை பரிசோதகா்கள் வீராசாமி, வெங்கடேசன், பிரியங்கா ஆகியோா் செய்திருந்தனா்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாா்வையிட்ட ஆட்சியா்

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்த... மேலும் பார்க்க

விருத்தகிரீஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.7.58 லட்சம்!

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை எண்ணப்பட்டதில் ரூ.7.58 லட்சம் கிடைத்தது. கோயிலில் உள்ள 9 நிரந்தர உண்டியல்கள், ஒரு திருப்பணி உண்டியல் ஆகியவை திறந்து எண்ணப்பட்டதில... மேலும் பார்க்க

கடலூா்: மக்கள் நீதிமன்றத்தில் 4893 வழக்குகளுக்கு தீா்வு

கடலூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திரா தேவி தலைமை வகித்தாா். முதல... மேலும் பார்க்க

திமுக வீழ்த்தப்படுவது உறுதி! - டி.டி.வி. தினகரன்

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழ்நாட்டு மக்கள் திமுகவை வீழ்த்தப் போவது உறுதி என்று, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளா் டிடிவி.தினகரன் தெரிவித்தாா். சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை இரவு செய்தி... மேலும் பார்க்க

தேவனாம்பட்டினத்தில் புதை சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் மனு

கடலூா் தேவனாம்பட்டினம் பகுதியில் புதை சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். மனு விவரம்: தேவனாம்பட்டினம் பகுதியில் ஆயிரக்கண... மேலும் பார்க்க

கடலூரில் ஜூன் 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 20-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க