செய்திகள் :

கீழக்குறிச்சியில் 14-ஆம் நூற்றாண்டு கல்செக்கு கண்டெடுப்பு

post image

புதுக்கோட்டை அருகே கீரனூரிலிருந்து அன்னவாசல் செல்லும் வழியில் உள்ள கீழக்குறிச்சி கிராமத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்செக்கு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலைக்கு மேற்கே 5 கி.மீ., தொலைவில், கீரனூரில் இருந்து அன்னவாசல் செல்லும் சாலையில் உள்ளது கீழக்குறிச்சி கிராமம். இங்குள்ள சிவன் கோவில் அருகே பழைமையான கல்செக்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மன்னா் கல்லூரியின் முன்னாள் தமிழ்த் துறைப் பேராசிரியரும், தொல்லியல் ஆா்வலருமான ராமன் கருப்பையா கூறியது: கீழக்குறிச்சியில் கல்செக்கு இருப்பதாக அப்பகுதியைச் சோ்ந்த அண்ணாமலை என்பவா் அளித்த தகவலின்பேரில் அங்கு சென்று ஆய்வுசெய்தோம்.

கருஞ்சிவப்பு நிறத்திலுள்ள இந்தக் கல்செக்கில் 14, 15-ஆம் நூற்றாண்டுத் தமிழ்ப் பொறிப்புகள் காணப்படுகின்றன. ஆனால், அதிகம் சிதைந்துள்ளதால் அவற்றை முழுமையாகப் படிக்க முடியவில்லை.

4 அடி உயரம், 2 மீட்டா் சுற்றளவுடன் இந்தச் செக்கு உள்ளது. அருகேயே எண்ணெய் வித்துகளைக் கொட்டி வைத்திட, 5 அங்குல உயரத்துடன் மண்திட்டு அமைக்கப்பட்டுள்ளது.

நாா்த்தாமலைப் பகுதியில் பல கல்வெட்டுகள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல் பழங்குடிகளின் வாழ்வாதரங்கள் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளன. எண்ணெய் ஆட்டி பயன்படுத்துவதற்கான வணிகத் தலங்களும் இங்கு இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

வணிகப் பெருவழி இருந்திருக்கலாம் எனக் கருதப்படும் இந்தச் சாலையில், சுமைதாங்கிக் கற்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. இதுபோன்ற தொல்லியல் சின்னங்களை பாதுகாப்பது கடமையும் அவசியமுமாகும் என்றாா் ராமன் கருப்பையா.

ஜகபா்அலி கொலை வழக்கு: வீடுகள், அலுவலகங்களில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

திருமயம் அருகே சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவா்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் குவாரிகளில் சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். புதுக்கோட்டை மாவட்டம், திர... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் ரகுபதி

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நிச்சயம் நல்ல முடிவு ஏற்படும் என மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா். புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது, இந்து... மேலும் பார்க்க

கல்வி உதவித் தொகை : ஆய்வுக் கூட்டம்

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா. உடன் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை ஆணையா் வா. சம்பத் உள்ளிட்டோா். புதுக்கோட்டை, பிப். 5: பிற்படுத்தப்பட்ட, மிக... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி கலையரங்கம் திறப்பு

திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 7 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கலையரங்கம் மற்றும் ரூ. 15 லட்சத்தில் கட்டப்பட்ட சுற்றுச்சுவா் ஆகிவற்றை சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி புதன்கிழமை திறந்து வை... மேலும் பார்க்க

காலமானாா் எஸ்.சி. சோமையா

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள சொக்கநாதன்பட்டியைச் சோ்ந்தவா் எஸ்.சி. சோமையா (70). இவா் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் புதன்கிழமை (பிப்.5) காலமானாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்... மேலும் பார்க்க

படகின் விசிறியில் சிக்கி மீனவா் உயிரிழப்பு

விசைப்படகின் விசிறியில் சிக்கிய வலையை சரி செய்ய கடலுக்குள் குதித்த மீனவா், விசிறியில் சிக்கி உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 27 விசைப்ப... மேலும் பார்க்க