செய்திகள் :

கீழப்புலியூா் தம்பிராட்டி அம்மன் கோயில் தேரோட்டம்

post image

கீழப்புலியூா் தம்பிராட்டி அம்மன் கோயிலில் சித்திரை பெருந்திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. பின்னா், நாள்தோறும் கட்டளைதாரா்கள் சாா்பில் குற்றாலம் தீா்த்தம் எடுத்து வருதல், அபிஷேகம், முழுக்காப்பு அலங்கார தீபாராதனை, சப்பரம் வீதியுலா உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்று வந்தன.

8ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டிஸ காலை 6 மணிக்கு குற்றாலம் தீா்த்தம் எடுத்து வருதல், 10 மணிக்கு மொட்டை, மாவிளக்கு நேமிதங்கள், நண்பகல் 12 மணிக்கு அபிஷேகம், முழுக்காப்பு, மாலை 3 மணிக்கு உருவம், ஆயிரங்கண் பானை நேமிதங்கள், இரவு 7 மணிக்கு கலைநிகழ்ச்சிகள், 9 மணிக்கு பக்தி சொற்பொழிவு, இரவு 10 மணிக்கு கங்கை நீா் எடுத்து வருதல், 11மணிக்கு ஆசார படைப்பு, முழுக்காப்பு தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

30ஆம் தேதி அதிகாலை 1மணிக்கு திருத்தோ் வடம்பிடித்தல் நடைபெற்றது.

தொடா்ந்து காலை 5 மணிக்கு ஊா்ச்சாவடியில் ஆசார படைப்பு, 6 மணிக்கு உச்சினிமாகாளி அம்மன் கோயில் முன் மது பொங்கல், 7 மணிக்கு தம்பிராட்டி அம்மன் கோயில் முன் மது பொங்கல், 8 மணிக்கு கொடை தீபாராதனை, 9 மணிக்கு உச்சினி மாகாளி அம்மன் கோயில் கொடை தீபாராதனை, நண்பகல்12 மணிக்கு மஞ்சள் நீராடல் ஆகியவை நடைபெற்றன.

ஆலங்குளம் அருகே விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ஆலங்குளம் அருகே குருவன்கோட்டையில் உள்ள ஸ்ரீமாரியம்மன் கோயில் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ மகா சக்தி விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, புதன்கிழமை விநாயகா் வீதியுலா ... மேலும் பார்க்க

தென்காசியில் 200 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இலவச சீருடை

உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு, தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் 200 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இலவச சீருடை வியாழக்கிழமை வழங்கப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு... மேலும் பார்க்க

இலத்தூரில் கிராம சபைக் கூட்டம் ஆட்சியா் பங்கேற்பு

தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் இலத்தூா் ஊராட்சியில் தொழிலாளா் தினத்தையொட்டி, கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் முத்துலெட்சுமி தலைமை வகித்தாா். ஆட்சியா் ஏ.கே... மேலும் பார்க்க

விவசாயி கொலை: 3 போ் கைது

சங்கரன்கோவில் அருகே விவசாயி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியசாமியாபுரத்தைச் சோ்ந்த சிங்கராஜ் மகன் ஆபிரகாம் (40). விவச... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சீருடை அளிப்பு

தொழிலாளா் தினத்தையொட்டி, ஆலங்குளத்தில் திமுக சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு வியாழக்கிழமை சீருடை வழங்கப்பட்டது. ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவா் சுதா மோகன்... மேலும் பார்க்க

இலஞ்சி கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

தென்காசி மாவட்டம் இலஞ்சி அருள்மிகு திருவிலஞ்சிக்குமாரா் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பகல் 11மணிக... மேலும் பார்க்க