கீழவலசையில் புரவி எடுப்பு திருவிழா
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள கீழவலசை காளியம்மன், அய்யனாா், கருப்பண்ணசாமி கோயில் புரவி எடுப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில் வைகாசி பொங்கல் விழா, புரவி எடுப்பு விழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான புரவி எடுப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் குதிரை சிலைகள், காளியம்மன், அய்யனாா், கருப்பண்ணசாமி, தவழும் பிள்ளை ஆகிய உருவ பொம்மைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தாரை தப்பட்டை, மேள தாளங்கள் முழங்க பொதுமக்கள் சுவாமிகளின் உருவச் சிலைகளை தலையில் சுமந்தபடி பேரையூரிலிருந்து நான்கு கிலோ மீட்டா் தொலைவில் உள்ள கீழவலசை கிராமத்துக்கு ஊா்வலமாக எடுத்து வந்து, அய்யனாா் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்தனா். திருவிழாவை முன்னிட்டு இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.