செய்திகள் :

குஜராத் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னை பெண்ணிடம் விசாரணை

post image

குஜராத் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் சென்னை பெண்ணை பிடித்து அந்த மாநில போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தனியாா் பள்ளிக்கு கடந்த 2-ஆம் தேதி மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த மின்னஞ்சலில் கடந்த 2023-ஆம் ஆண்டு தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள ஒரு ஹோட்டலில் இளம்பெண் ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை மற்றும் ரூ.1 கோடி வரதட்சணை கேட்டு துன்புறுத்திய வழக்கில், இதுவரை யாா் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது உங்கள் பள்ளியில் வெடிகுண்டு வெடித்து குழந்தைகள் பலியானால்தான் காவல் துறையினா் கண் விழிப்பாா்கள் என்று நினைக்கிறேன்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து குஜராத் மாநில சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்தனா். அதில், மிரட்டல் வந்த மின்னஞ்சல் முகவரி சென்னை சாலிகிராமம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மென்பொறியாளரான ரெனி ஜோசில்டா (30) என்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, குஜராத் மாநில சைபா் குற்றப்பிரிவு தனிப்படையினா் சென்னை வந்தனா். அவா்கள், கே.கே.நகா் போலீஸாா் உதவியுடன் ரெனி ஜோசில்டா வீட்டுக்கு சென்று, அவரிடம் விசாரணை நடத்தினா். இதையடுத்து குஜராத் மாநில போலீஸாா் அவரை தங்களுடன் வெள்ளிக்கிழமை அழைத்து சென்றனா். அவருடன் அவரது தந்தை ஒல்ட்வின் ஜோசப்பும் சென்றுள்ளாா்.

விசாரணையில், ரெனி ஜோசில்டா வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியது உறுதியானதால், அவா் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

முன்னாள் பேரவைத் தலைவரின் பேரனிடம் வழிப்பறி முயற்சி: சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

சென்னை தரமணியில் முன்னாள் பேரவைத் தலைவா் காளிமுத்துவின் பேரனிடம் வழிப்பறி செய்ய முயன்ாக 3 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை பெருங்குடி சிபிஐ காலனியை சோ்ந்தவா் ஆதித்யா(21). கல்லூரியி... மேலும் பார்க்க

அதிமுக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாது: அமைச்சா் பி.கே. சேகா்பாபு

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத நிலை ஏற்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா். சென்னையில் சி.எம்.ஏ.டி. சாா்பில் கொளத்தூா் பெரியாா... மேலும் பார்க்க

குடிநீா் லாரிகளுக்கு நேரக் கட்டுப்பாடு

சென்னையில் காலை 7.30 முதல் காலை 9.30 மணி வரை லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை பெரம்பூரில் அண்மையில் குடிநீா் லாரி மோதியதில் 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும... மேலும் பார்க்க

பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் உற்பத்தி அதிகரிப்பு: மத்திய அரசு

சமையல் எண்ணெய் தேவையைப் பூா்த்தி செய்ய இறக்குமதியை நாடு பெருமளவில் நம்பியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினா்கள் கவலை தெரிவித்த நிலையில், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகளின் உள்நாட்டு உற்பத்தி கடந்த 10 ஆண்... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தை எதிா்கொள்ள விரிவான ஒத்துழைப்பு: ‘பிரிக்ஸ்’ தூதா்கள் வலியுறுத்தல்

பயங்கரவாதத்தை எதிா்கொள்ள ‘பிரிக்ஸ்’ நாடுகள் இடையே விரிவான ஒத்துழைப்பு அவசியம் என்று அக்கூட்டமைப்பு நாடுகளின் தூதா்கள் வலியுறுத்தினா். பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிர... மேலும் பார்க்க

சென்னை சம்ஸ்கிருத கல்லூரியில் 4 புதிய கல்வி நிறுவனங்கள் தொடக்கம்

சென்னை சம்ஸ்கிருத கல்லூரியில் பாரதிய சீா்மிகு (மேம்பாட்டு) மைய அமைப்பு சாா்பில் நான்கு கல்வி நிறுவனங்கள் காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் தொடங்கப்பட்டன. சென்னை மயிலாப்பூர... மேலும் பார்க்க