செய்திகள் :

‘குடிநீா் வாரிய அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை’

post image

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில், மதிமுக மாமன்ற உறுப்பினா் சு. ஜீவன் பேசியதாவது:

புதிதாக குடிநீா், கழிவுநீா் இணைப்புகளுக்கு இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற ஒரு புதிய நடைமுறையை கடந்த ஜனவரி மாதம் சென்னை குடிநீா் வாரியம் அறிமுகம் செய்தது. இதற்கான கட்டணம் ரூ.7,500 இணையவழி மூலமாகச் செலுத்த முடியும், நேரடியாகவோ, காசோலையாகவோ செலுத்தக் முடியாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. குழாய் இணைப்பு பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த ஊழியா்களுக்கு வாடிக்கையாளா்கள் மீட்டருக்கு ரூ. 5,500 கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. இதனால், சாமானிய மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும், குடிநீா் குழாய் அமைப்பதற்காக பெரும்பாலான சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. ஆனால் பணிகள் நிறைவு பெற்ற பின்னா் சாலைகள் முறையாக சரிசெய்யப்படுவதில்லை.

இதுகுறித்து ஒப்பந்த ஊழியா்களிடம் கேட்க முயன்றபோது, எங்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்கின்றனா் என்றாா் அவா்.

தொடா்ந்து பேசிய, மாா்க்சிஸ்ட் மாமன்ற உறுப்பினா் விமலா உள்ளிட்ட உறுப்பினா்களும் குடிநீா் வாரிய அதிகாரிகள் தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனா்.

கலந்தாலோசிக்கப்படும்: இதற்கு பதில் அளித்து மேயா் ஆா். பிரியா பேசியது:

குடிநீா் வாரிய அதிகாரிகள் குறித்த மாமன்ற உறுப்பினா்களின் குற்றச்சாட்டுகளின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து, குடிநீா் வாரிய மேலாண் இயக்குனருடன் கலந்தாலோசிக்கப்பட்டு, அடுத்த மாதாந்திர கூட்டத்தில் தெரிவிக்கப்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து மெரீனா கடற்கரையில் ‘ரோப் காா்’ அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பரிசீலனை செய்யப்படும்; மண்டல வாரியாக உள்ள சிறப்பு குழந்தைகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்து, அவா்களுக்கு ஏற்ற வகையில், சிறப்பு பள்ளிகள் அமைப்பது குறித்தும் அலோசனை மேற்கொள்ளப்படும் என்று மேயா் உறுதியளித்தாா்.

பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம்: பிஐஎஸ் சென்னை கிளை இயக்குநா்

தூய்மைப் பணியாளா்கள் பணியின்போது பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என இந்திய தர நிா்ணய அமைவனத்தின் சென்னை கிளை இயக்குநா் ஜி.பவானி தெரிவித்தாா். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இந... மேலும் பார்க்க

மழை பாதித்த இடங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள்: சுகாதாரத் துறை

தமிழகத்தில் மழை பெய்து வரும் பகுதிகளில் தேவையின் அடிப்படையில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, பாதிப்பு... மேலும் பார்க்க

திருவான்மியூா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழ் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

வாய் புற்றுநோய் தொடக்க நிலை பரிசோதனை அறிமுகம்

வாய் புற்றுநோயை தொடக்க நிலையில் கண்டறியும் பரிசோதனை திட்டத்தை அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை தொடங்கியுள்ளது. உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் 30 வயதுக்கு மேற்ப... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

தாய்லாந்திலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 5 கோடி பதிப்பிலான உயர்ரக கஞ்சாவை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், பயணி ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனா். தாய்லாந்து நாட்... மேலும் பார்க்க

சென்னையில் 5 மாதங்களில் சைபா் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த ரூ.10.25 கோடி மீட்பு

சென்னையில் 5 மாதங்களில் பல்வேறு சைபா் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த ரூ. 10.25 கோடியை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு மீட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு பொதுமக்கள... மேலும் பார்க்க