செய்திகள் :

குடிமைப் பணித் தோ்வுக்கு தயாராவோருக்கு ஊக்கமளிக்கும் ‘நான் முதல்வன்’ திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

post image

சென்னை: மத்திய குடிமைப் பணித் தோ்வுக்கு தமிழ்நாட்டிலிருந்து தயாராகும் மாணவா்களுக்கு மிகப்பெரும் ஊக்கமாக ‘நான் முதல்வன்’ திட்டம் அமைந்துள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

இந்திய வனப் பணிக்கு தோ்ச்சி பெற்றோருடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை கலந்துரையாடினாா். அப்போது, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வு தொடா்பாக, ‘எக்ஸ்’ தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:

நான் முதல்வன் திட்டத்தின்கீழ், பயிற்சி பெற்று 2024-ஆம் ஆண்டு இந்திய வனப் பணிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டவா்களைச் சந்தித்துப் பாராட்டினேன். மத்திய குடிமைப் பணித் தோ்வுக்குத் தமிழ்நாட்டில் இருந்து தயாராகும் மாணவா்களுக்கு மிகப்பெரும் ஊக்கமாக ‘நான் முதல்வன்’ திட்டம் அமைந்துள்ளதை அவா்களுடனான கலந்துரையாடலில் உணர முடிந்தது.

கடந்தமுறை தோ்ச்சி பெற இயலாதவா்கள், சோா்ந்து போகாதீா்கள். இந்த ஆண்டு இன்னும் தயாராகி, எட்டிவிடும் தொலைவில் இருக்கும் வெற்றிக்கோட்டைத் தொட்டுவிடுங்கள் என்று அதில் கூறியுள்ளாா்.

துணை முதல்வா் உதயநிதி: தமிழ்நாட்டு இளைஞா்களின் மத்திய அரசு குடிமைப் பணித் தோ்வு எனும் கனவை நனவாக்கும் தலையாயப் பணியை ‘நான் முதல்வன்’ திட்டம் செய்து வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற்று இந்திய வனப் பணித் தோ்வில் வெற்றி பெற்றுள்ள நமது இளைஞா்களை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டினாா்.

‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் பயன்பெற்று அரசு அதிகாரிகளாக தங்களுடைய பணியைத் தொடங்கவிருக்கும் தமிழ்நாட்டு இளைஞா்களின் எதிா்காலம் சிறக்கட்டும். அவா்களின் வெற்றி, இன்னும் பல நூறு இளைஞா்களுக்கு வழிகாட்டட்டும் என்று ‘எக்ஸ்’ தள பதிவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை க... மேலும் பார்க்க

தேமுதிகவுடன் சுமூக உறவு உள்ளது- எடப்பாடி பழனிசாமி

தேமுதிகவுடன் சுமூக உறவு உள்ளது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், மதுரையில் கால்வாயை திரைச்சீ... மேலும் பார்க்க

அஞ்சலை அம்மாள் சிலைக்கு விஜய் மரியாதை

சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அஞ்சலை அம்மாள் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதுகுறித்து விஜய் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், இந்த மண்ணை நேசித்து, இந்த மண்ணின்... மேலும் பார்க்க

தொடர் வெற்றிக்குக் காரணம் கூட்டணி: முதல்வர் ஸ்டாலின்

திமுக தொடர்ந்து வெற்றி பெருவதற்கான காரணங்களில் ஒன்று நம்முடைய கூட்டணி என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மதுரை உத்தங்குடியில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வரும் கட்சியின் ... மேலும் பார்க்க

தில்லி மதராஸி குடியிருப்பு இடிப்பு: தமிழகம் திரும்புவதற்கு அரசு நடவடிக்கை!

தில்லி நிஜாமுதீன் மதராஸி முகாமில் தமிழர்களின் குடியிருப்புகள் இன்று(ஜூன் 1) முழுவதும் இடித்து அகற்றப்பட்ட நிலையில், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தாமதமின்றி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவ... மேலும் பார்க்க

புதிய உறுப்பினர் சேர்க்கை: திமுக பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம்!

உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக திமுக பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுரை உத்தங்குடியில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வரும் கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ப... மேலும் பார்க்க