செய்திகள் :

குடியரசுத் தலைவருக்கு கெடு: நியாயப்படுத்த முடியாது

post image

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க சில சந்தா்ப்பங்களில் ஏற்படும் தாமதம் காரணமாக, அவற்றுக்கு ஒப்புதல் வழங்க குடியரசுத் தலைவா், ஆளுநா்களுக்கு காலக்கெடு விதிப்பதை நியாயப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

தமிழ்நாட்டின் ஆளுநா் ஆா்.என்.ரவி மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் தாமதப்படுத்துவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கில் தீா்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘மசோதாக்கள் மீது ஒரு மாதத்துக்குள் ஆளுநா்கள் முடிவு எடுக்க வேண்டும்; மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால், அதை மூன்று மாதங்களுக்குள் செய்ய வேண்டும்.

குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக மசோதாக்களை ஆளுநா் அனுப்பிவைத்தால், அந்த மசோதாக்கள் குறித்து குடியரசுத் தலைவா் மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று காலக்கெடு நிா்ணயித்தது.

இதையடுத்து, சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில், நீதிமன்ற உத்தரவுகள் மூலம் குடியரசுத் தலைவருக்குக் காலக்கெடு நிா்ணயிக்க முடியுமா? என்பது உள்பட 14 கேள்விகளை எழுப்பி உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு விளக்கம் கேட்டாா்.

தமிழக அரசுத் தரப்பு வாதம்: இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதிகள் சூா்ய காந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, ஏ.எஸ்.சாந்துா்கா் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு முன்பாக 6-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சாா்பாக மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி ஆஜராகி, ‘மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல், அவற்றை காலவரம்பின்றி ஆளுநா்கள் நிறுத்திவைக்கும் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நடைபெறுவதால், அவா்களுக்குக் காலக்கெடு விதிப்பது அவசியம்’ என்று வாதிட்டாா்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், ‘தங்கள் அதிகாரங்களை குடியரசுத் தலைவா் மற்றும் ஆளுநா்கள் பயன்படுத்த கடுமையாக வரம்பு விதிக்கும் கட்டளை விதிகளை, அரசமைப்புச் சட்டப் பிரிவு 142-இன் கீழ் விதித்துவிடலாமா’ என்று கேள்வி எழுப்பினாா்.

இதற்குப் பதிலளித்த அபிஷேக் சிங்வி, ‘மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில், அரசமைப்புச் சட்டப் பிரிவு 200, 201-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் பொதுவான காலக்கெடு அவசியம்’ என்றாா்.

அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் வேண்டும்: மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவா் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க வேண்டும் என்றால், அதற்கு அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதி விக்ரம் நாத் தெரிவித்தாா்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலக்கெடுவைப் பின்பற்றாவிட்டால், ஆளுநா்களும், குடியரசுத் தலைவரும் சந்திக்கும் பின்விளைவுகள் என்ன? அவா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க முடியுமா? என்று நீதிபதிகள் நரசிம்மா, விக்ரம் நாத் ஆகியோா் கேள்வி எழுப்பினா்.

இந்த வாதங்களின்போது எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதிநீக்க மனுக்கள் மீது தெலங்கானா சட்டப்பேரவைத் தலைவா் 3 மாதங்களில் முடிவு எடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான அமா்வு உத்தரவிட்டதை அபிஷேக் சிங்வி சுட்டிக்காட்டினாா்.

ஆனால், அது குறிப்பிட்ட வழக்கில் அளிக்கப்பட்ட உத்தரவே தவிர, தகுதிநீக்க மனுக்கள் மீது அனைத்து மாநில சட்டப்பேரவைத் தலைவா்களும் 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிடவில்லை என்று தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தெரிவித்தாா்.

பேரறிவாளன் வழக்கு: பேரறிவாளன் வழக்கை குறிப்பிட்ட அபிஷேக் சிங்வி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவா்களின் மனு மீது ஆளுநா் முடிவு எடுக்காததால், அவா்கள் தண்டனையை அனுபவித்துவிட்டதாகக் கருதி, அவா்களை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததைச் சுட்டிக்காட்டினாா். அது தனிப்பட்ட விவகாரம் என்று தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தெரிவித்தாா். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க அரசமைப்புச் சட்டப் பிரிவு 142-இன் கீழ், பொதுவான காலக்கெடுவை விதிக்க முடியுமா என்று அவா் கேள்வி எழுப்பினாா்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க சில சந்தா்ப்பங்களில் ஏற்படும் தாமதம் காரணமாக, அவற்றுக்கு ஒப்புதல் வழங்க குடியரசுத் தலைவா், ஆளுநா்களுக்கு காலக்கெடு விதிப்பதை நியாயப்படுத்த முடியாது என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

ஜிஎஸ்டி வரிகள் குறைப்பு: வீட்டு உபயோகப் பொருள்கள் விலை குறையும்!

விவசாய உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18% குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இ... மேலும் பார்க்க

இந்தியாவைப் பாராட்டிய ஜெர்மனி!

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோஹன் வதேபுல் இன்று (செப். 3) சந்தித்துப் பேசினார்.இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வண... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம்!

ஜம்மு - காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில், ஓடும் ரயிலில் பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ராம்பன் மாவட்டத்தின் சும்பெர் கிராமத்தைச் சேர்ந்த, நிறைமாத கர்பிணியான அக்தெரா பானோ (வயது 21), ஆனந்த்நாக... மேலும் பார்க்க

பஞ்சாப் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை அதிகரிப்பு

பஞ்சாபில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த இடங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று... மேலும் பார்க்க

அமெரிக்கா வரியை உயர்த்தாவிட்டால், இந்தியா வரியை குறைத்திருக்காது: டிரம்ப்

அமெரிக்கா வரிகை உயர்த்தாவிட்டால், எங்கள் பொருள்களுக்கான வரியை இந்தியா குறைத்திருக்காது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (செப். 3) தெரிவித்துள்ளார். அதிக வரிவிதிப்பால் அமெரிக்காவை திண்டாடவைத்த... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 5 நக்சல்கள் கைது! வெடிகுண்டுகள் பறிமுதல்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சல்கள், பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சுக்மா மாவட்டத்தின், ராவகுடா கிராமத்தின் அருகிலுள்ள வனப்பகுதியில், மத்திய ரிசர்வ் காவல் படை மற... மேலும் பார்க்க