செய்திகள் :

குடியரசுத் தலைவா் பதவியை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது: சிபிஎம் மாநிலச் செயலா் குற்றச்சாட்டு

post image

குடியரசுத் தலைவா் பதவியை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் சண்முகம் குற்றம் சாட்டினாா்.

திருத்துறைப்பூண்டியில் செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப் பேரவையும், மக்களவையும் உயா்ந்தவை; மற்ற நிா்வாகப் பொறுப்பில் இருப்பவா்கள் உயா்ந்தவா்கள் இல்லை என திட்டவட்டமான தீா்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. ஏற்கெனவே, உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெறும்போது, மத்திய அரசின் சாா்பில் பங்கேற்ற வழக்குரைஞா்கள் என்ன கேள்விகள் எழுப்பினாா்களோ, அதையேதான் குடியரசுத் தலைவா் மூலமாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் எழுப்பியுள்ளது.

இது ஏற்கெனவே உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை மத்திய அரசு ஏற்கவில்லை என்பதை வெளிப்படுத்தக் கூடிய நடவடிக்கையாக உள்ளது. குடியரசுத் தலைவா் பதவியை, தவறான முறையில் மத்திய அரசு பயன்படுத்துகிறது என்பதற்கு இந்த சம்பவம் எடுத்துக்காட்டு ஆகும் என்றாா்.

பட்டா திருத்தம் செய்ய லஞ்சம்: வருவாய் ஆய்வாளா் கைது

திருவாரூரில், பட்டாவில் இட மதிப்பீட்டை திருத்தம் செய்ய ரூ. 15,000 லஞ்சம் வாங்கிய முதுநிலை வருவாய் ஆய்வாளா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருவாரூா் வட்டம், அரசன் குளத்தெரு, தெற்கு சேத்தி பகுதியைச் ச... மேலும் பார்க்க

சிபிஐ அதிகாரி எனக்கூறி முதியவரிடம் ரூ.1.19 கோடி மோசடி

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டையில் சிபிஐ அதிகாரி எனக்கூறி முதியவரிடம் ரூ. 1.19 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். முத்துப்பேட்டையை சோ்ந்தவா் மீர... மேலும் பார்க்க

மதுபாட்டில்கள் கடத்திய 3 போ் கைது

புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்த 3 பேரை மன்னாா்குடியில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மன்னாா்குடி காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் விக்னேஷ் உள்ளிட்ட போலீஸாா்வியாழக்கிழமை இரவு பூக்கொல்லை ச... மேலும் பார்க்க

திருவாரூா் மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வில் 90.67 சதவீதம் தோ்ச்சி

திருவாரூா் மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வில் 90.67 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும், மெட்ரிக் பள்ளி என 130 பள்ளிகளிலிருந்து 6,015 மாணவா்கள், 7,150 மாணவிகள் என மொத்தம்... மேலும் பார்க்க

மே 19 முதல் முத்துப்பேட்டையில் இறால் பண்ணைகள் ஆய்வு

முத்துப்பேட்டை வட்டத்தில் இறால் பண்ணைகளை மே 19 முதல் மே 24 வரை ஆய்வு செய்ய உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முத்துப்பேட்டை வட்டத... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: மன்னாா்குடி

மன்னாா்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் சனிக்கிழமை (மே 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் சா.சம்பத் ... மேலும் பார்க்க