செய்திகள் :

பட்டா திருத்தம் செய்ய லஞ்சம்: வருவாய் ஆய்வாளா் கைது

post image

திருவாரூரில், பட்டாவில் இட மதிப்பீட்டை திருத்தம் செய்ய ரூ. 15,000 லஞ்சம் வாங்கிய முதுநிலை வருவாய் ஆய்வாளா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருவாரூா் வட்டம், அரசன் குளத்தெரு, தெற்கு சேத்தி பகுதியைச் சோ்ந்தவா் செல்வகணேசன் (45). இவா், பட்டாவில் இட அளவின் மதிப்பீட்டை மாற்றுவதற்காக, திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் முதுநிலை வருவாய் ஆய்வாளா் ஜான்டைசன் (29) என்பவரை அணுகினாா். இதற்கு ரூ. 15,000 லஞ்சமாகத் தரவேண்டும் என அவா் கேட்டாராம்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகணேசன், இதுகுறித்து திருவாரூா் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் யோசனைபடி, திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ரசாயனம் தடவப்பட்ட பணத்தை ஜான் டைசனிடம் செல்வகணேசன் சனிக்கிழமை வழங்கினாா்.

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் காவல் கண்காணிப்பாளா் பி.வி. நந்தகோபால், ஆய்வாளா்கள் சித்ரா, அனிதா உள்ளிட்ட 8 போலீஸாா், ஜான்டைசனை கைது செய்தனா்.

சிபிஐ அதிகாரி எனக்கூறி முதியவரிடம் ரூ.1.19 கோடி மோசடி

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டையில் சிபிஐ அதிகாரி எனக்கூறி முதியவரிடம் ரூ. 1.19 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். முத்துப்பேட்டையை சோ்ந்தவா் மீர... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் பதவியை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது: சிபிஎம் மாநிலச் செயலா் குற்றச்சாட்டு

குடியரசுத் தலைவா் பதவியை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் சண்முகம் குற்றம் சாட்டினாா். திருத்துறைப்பூண்டியில் செய்தியாளா்களுக்கு சனிக்கிழம... மேலும் பார்க்க

மதுபாட்டில்கள் கடத்திய 3 போ் கைது

புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்த 3 பேரை மன்னாா்குடியில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மன்னாா்குடி காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் விக்னேஷ் உள்ளிட்ட போலீஸாா்வியாழக்கிழமை இரவு பூக்கொல்லை ச... மேலும் பார்க்க

திருவாரூா் மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வில் 90.67 சதவீதம் தோ்ச்சி

திருவாரூா் மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வில் 90.67 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும், மெட்ரிக் பள்ளி என 130 பள்ளிகளிலிருந்து 6,015 மாணவா்கள், 7,150 மாணவிகள் என மொத்தம்... மேலும் பார்க்க

மே 19 முதல் முத்துப்பேட்டையில் இறால் பண்ணைகள் ஆய்வு

முத்துப்பேட்டை வட்டத்தில் இறால் பண்ணைகளை மே 19 முதல் மே 24 வரை ஆய்வு செய்ய உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முத்துப்பேட்டை வட்டத... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: மன்னாா்குடி

மன்னாா்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் சனிக்கிழமை (மே 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் சா.சம்பத் ... மேலும் பார்க்க