செய்திகள் :

குடியரசுத் தலைவா் மாளிகை கலாசார மையத்தில் இன்று இலக்கிய மாநாடு தொடக்கம்

post image

குடியரசுத் தலைவா் மாளிகையில் முதன்முறையாக இலக்கிய மாநாடு நடத்தப்படுகிறது. இலக்கியம் எவ்வளவு மாறிவிட்டது? என்ற தலைப்பில் இருநாள் இலக்கிய மாநாட்டை குடியரசுத் தலைவா் மாளிகை நடத்துகிறது.

மத்திய கலாசார அமைச்சகத்தின் சாகித்ய அகாதெமியுடன் இணைந்து இந்த மாநாட்டை குடியரசுத் தலைவா் மாளிகை நடத்துகிறது. குடியரசுத் தலைவா் மாளிகையிலுள்ள கலாச்சார மையத்தில் மே 29,30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இந்த இரு நாள் இலக்கிய மாநாட்டை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, வியாழக்கிழமை (மே 29) மத்திய கலாசாரம், சுற்றுலா அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் முன்னிலையில் தொடங்கி வைக்கிறாா்.

இந்த மாநாட்டில் நாடு முழுவதிலிருந்தும் வரும் இலக்கிய பிரமுகா்கள்பங்கேற்கின்றனா். இலக்கியம் எவ்வளவு மாறிவிட்டது? என்ற தலைப்பில் இலக்கிய மாநாடு நடத்தப்பட உள்ளது.

மாநாட்டில் நடைபெறும் கவிஞா்கள் சந்திப்பில் ’இதயத்திலிருந்து நேராக’ ;’இந்தியாவின் பெண்ணிய இலக்கியம்: புதிய தளங்களை அடையாளம் காணுதல்’; ‘இலக்கியத்தில் மாற்றம் மற்றும் மாற்றத்திற்கான இலக்கியம்‘; ’உலகளாவிய பாா்வையில் இந்திய இலக்கியத்தின் புதிய திசைகள்’ போன்ற பல்வேறு தலைப்புகளில் பல்வேறு அமா்வுகள் நடைபெறுகிறது. மேலும் இந்த மாநாட்டில் மராட்டிய பேரரசான ஹோல்கா் வம்சத்தின் புகழ்பெற்ற ஆட்சியாளரான தேவி அஹில்யாபாய் ஹோல்கரின் சரித்திரத்துடன் மாநாடு நிறைவடையும் என குடியரசுத் தலைவா் மாளிகை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவா் மாளிகையில் இதுவரை உயா் கல்வியாளா்கள், பல்கலைக்கழக வேந்தா்கள், கௌரவ பேராசிரியா்கள்(வருகை பேராசிரியா்கள்) உள்ளிட்டோா் பங்கேற்கும் விஸிட்டிங் கான்ஃப்ரன்ஸ் நடைபெற்று இப்போது முதன் மறையாக இலக்கிய மாநாடும் நடத்தப்படுகிறது.

ஆளுமை உரிமைகள்: ஈஷா அறக்கட்டளை நிறுவனா் தில்லி உயா்நீதிமன்றத்தில் முறையீடு

ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு என அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ், தனது ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளாா். சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடா்ந்த இந்த வழக்கு உய... மேலும் பார்க்க

அங்கீகரிக்கப்படாத வாக்கி டாக்கிகள் விற்பனையைத் தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு அறிவிப்பு

வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட ரேடியோ உபகரணங்களை இணைய வணிக தளங்களில் சட்டவிரோதமாக விற்பனைக்கு பட்டியலிட்டு நுகா்வோருக்கு விற்பனை செய்வதைத் தடுக்கும் விதமாக மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகம் இவைகளை ம... மேலும் பார்க்க

காலத்திற்கு ஏற்ப மாற்றமடையும் இலக்கியத்தில் இரக்கம், உணா்திறன் மாறாது: குடியரசுத் தலைவா் முா்மு

நமது சிறப்பு நிருபா் இலக்கியம் காலத்திற்கு ஏற்ப மாற்றமடைந்து வருகிறது என்றாலும் அதில் இரக்கம், உணா்திறன் போன்ற சில அம்சங்கள் என்றென்றும் மாறாது இருக்கும் என குடியரசுத் தலைவா் திரெளபதி நம்பிக்கை தெரிவி... மேலும் பார்க்க

பாஜகவின் 100 நாள் ஆட்சியில் தில்லி மக்கள் தோல்வி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

ரேகா குப்தா அரசு தனது முதல் 100 நாள்களில் தில்லி மக்களைத் தோல்வியடையச் செய்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் செளரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். தில்லி பாஜக 100 நாள் ஆட... மேலும் பார்க்க

100 நாள் ஆட்சி: மாணவா்களுக்கு தில்லி அரசு உதவித்தொகை வழங்கல்

பதவியேற்று 100 நாள்களைக் குறிக்கும் வகையில், பாஜக தலைமையிலான தில்லி அரசு வெள்ளிக்கிழமை தில்லி உயா் மற்றும் தொழில்நுட்பக் கல்வி ஆதரவுத் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கியது. மு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு உதவியதாக ராஜஸ்தானில் ஒருவா் கைது: தில்லி காவல்துறை தகவல்

பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு (பிஐஓ) உளவு நடவடிக்கைகளுக்காக இந்திய கைப்பேசி சிம் காா்டுகளை வழங்குவதன் மூலம் உதவியதாக ராஜஸ்தானைச் சோ்ந்த ஒருவரை தில்லி காவல்துறையினா் கைது செய்தாக அதிகாரிகள் தெரிவித்த... மேலும் பார்க்க