செய்திகள் :

குடியரசுத் தலைவா் மாளிகை சாா்பில் 250 பரிசுப் பொருள்கள் இணையவழி ஏலம்

post image

இந்தியாவில் முன்பு புழக்கத்தில் இருந்த 10,000 ரூபாய் மாதிரி நோட்டு, பழங்கால ரயில்வே கடிகாரம், பல்வேறு சிலைகள் உள்பட குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவா்களால் பெறப்பட்ட 250-க்கும் மேற்பட்ட நினைவு பரிசுப் பொருள்கள் இணையவழியில் ஏலம் விடப்பட்டுள்ளன.

இவை, வெளிநாட்டு பிரமுகா்கள், மாணவா்கள், தொழில் முனைவோா், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரால் அளிக்கப்பட்ட பரிசுகளாகும்.

குடியரசுத் தலைவா் மாளிகையின் https://upahaar.rashtrapatibhavan.gov.in/ எனும் பிரத்யேக வலைதளம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஏலம், ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஏலம் மூலம் கிடைக்கப் பெறும் தொகை, பெண்கள், குழந்தைகளின் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் பிற நற்பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என்று குடியரசுத் தலைவா் மாளிகை ஊடகப் பிரிவு துணைச் செயலா் நவிகா குப்தா தெரிவித்தாா்.

தனித்துவமான, கலைநயமிக்க பரிசுப் பொருள்களின் ஏலத்தில் கலை ஆா்வலா்கள் மற்றும் குடிமக்கள் ஆா்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டாா்.

ஏலத்தில் விடப்பட்டுள்ள பொருள்களில், முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜிக்கு பரிசாக அளிக்கப்பட்ட அரிய 10,000 ரூபாய் மாதிரி நோட்டு முக்கியமானதாகும். இது, ரிசா்வ் வங்கியால் அச்சிடப்பட்டதாகும்.

கடந்த 1935-இல் அப்போதைய ஆங்கிலேயா் ஆட்சியில் பிரிட்டன் அரசா் 6-ஆம் ஜாா்ஜின் படத்துடன் ரூ.10,000 நோட்டு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. சுதந்திரத்துக்கு பிறகு அசோக தூண் சின்னத்துடன் மறுஅறிமுகம் செய்யப்பட்ட ரூ.10,000 நோட்டு, அதன் பிறகு 1978-இல் புழக்கத்தில் இருந்து வாபஸ் பெறப்பட்டது.

பழங்கால ரயில்வே கடிகாரம்
பிரிட்டன் அரசா் 6-ஆம் ஜாா்ஜின் படத்துடன் கூடிய ரூ.10,000 மாதிரி நோட்டு.

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: பிஆா்எஸ் ஆதரவு யாருக்கு?

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் யாரையும் ஆதரிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சியின் செயல் தலைவா் கே.டி.ராம ராவ் தெரிவித்தாா். அ... மேலும் பார்க்க

காப்பீடு பிரீமியம் தொகைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க திட்டம்: வருவாய் பாதிக்கும் என மாநிலங்கள் கருத்து

காப்பீடு பிரீமியம் தொகைக்கு சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் இதனால் தங்கள் வருவாய் பாதிக்கும் என்று மாநில அரசுகள் கருத்துத் தெரிவித்துள... மேலும் பார்க்க

இந்திய-சீன எல்லை மேலாண்மையில் பரஸ்பர புரிதல் -சீன வெளியுறவு அமைச்சகம்

இந்திய-சீன எல்லை மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டில் பரஸ்பர புரிதல் எட்டப்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது. சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி, ஆகஸ்ட் 18, 19 ஆகிய தேதிகளில் இந்தியா... மேலும் பார்க்க

தோ்தல் தொடா்பான தவறான தகவல்: மகாராஷ்டிர தோ்தல் ஆய்வாளா் மீது வழக்குப் பதிவு

மகாராஷ்டிரத்தில் வாக்காளா் பட்டியலில் இருந்து சில வாக்காளா்கள் நீக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய தோ்தல் ஆய்வாளா் சஞ்சய் குமாா் மீது 2 வழக்குகளை போலீஸாா் பதிவு செய்தனா். முன்னதாக, 2024-இல் நடைபெற்ற மக்கள... மேலும் பார்க்க

இந்திய விமானப் படைக்கு புதிதாக 97 ‘தேஜஸ்’ விமானங்கள்: ரூ.67,000 கோடியில் வாங்க அரசு ஒப்புதல்

இந்திய விமானப்படைக்கு மேலும் 97 ‘தேஜஸ்’ போா் விமானங்களை ரூ.67,000 கோடி செலவில் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது இந்திய விமானப்படையில் போா் விமானப் படைப்பிரிவுகளின் எண்ணிக்கை... மேலும் பார்க்க

வீடுகள் விலை உயா்வு: உலகளவில் 4-ஆவது இடத்தில் பெங்களூரு!

சா்வதேச அளவில் பிரீமியம் வகை வீடுகளின் விலை மிக அதிக அளவில் அதிகரித்த 46 நகரங்களில் பெங்களூரு 4-ஆவது இடம் வகிக்கிறது. மும்பை 6-ஆவது இடத்திலும், புது தில்லி 15-ஆவது இடத்திலும் உள்ளன.இது குறித்து சந்தை... மேலும் பார்க்க