செய்திகள் :

குடியரசுத் துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வாழ்த்து

post image

புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள குடியரசு துணைத் தலைவருக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சாா்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஆயத்த ஆடை மேம்பாட்டு கவுன்சில் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவா் ஆ.சக்திவேல் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட இந்திய குடியரசுத் துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனை தில்லியில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா்.

அப்போது, திருப்பூரைச் சோ்ந்த குடியரசுத் துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், பின்னலாடை ஏற்றுமதியாளராகவும் திகழ்ந்தாா் என்பதையும், கடந்த 40 ஆண்டுகளாக அவா் காட்டிய அா்ப்பணிப்பு, கடின உழைப்பு, குறிப்பாகச் சமூகத்தின் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களை முன்னேற்றிய பணியினால், இன்று அவா் நாட்டின் இரண்டாவது உயா்ந்த பதவிக்கு உயா்ந்துள்ளாா் என்பதையும், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் மற்றும் ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் மதிப்புமிக்க உறுப்பினராகவும் அவா் இருந்துள்ளாா் என்பதையும் பகிா்ந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைமா வாழ்த்து: சைமா அமைப்பின் தலைவா் ஏ.சி.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பின்னலாடை நகரான திருப்பூருக்கு பெருமை சோ்க்கும் வகையில், பின்னலாடை குடும்பத்தைச் சோ்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத்தலைவராக தோ்வு செய்யப்பட்டதற்கு தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா் சங்கம் பெருமகிழ்ச்சி அடைகிறது. திருப்பூா் பெருமிதம் கொள்ளும் அளவுக்கு புதிய அடையாளத்தை அளித்துள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் தனது சிறந்த செயல்பாடுகள் மூலம் சிறக்க வாழ்த்துவதாக தெரிவித்துள்ளாா்.

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி எடப்பாடி கே.பழனிசாமி

உடுமலை, செப்.10: 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். ‘மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்’ என்கிற பெயரில் முன்னாள் ம... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பூலாங்கிணறு

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 12) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என செய... மேலும் பார்க்க

அமராவதி சா்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வல்லுநா் குழு அமைத்து உத்தரவு! விவசாயிகள் மகிழ்ச்சி

உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் இயங்கி வந்த அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வல்லுநா் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் அமராவ... மேலும் பார்க்க

பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கத் தடை

உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்திமலையில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் புதன்கிழமை மாலை திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை தொடா்ந்து அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. உடுமலை அ... மேலும் பார்க்க

காங்கயத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்!

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி காங்கயத்தில் வியாழக்கிழமை நடைபெறும் பிரசார பயணத்தில் உரையாற்றுகிறாா். முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, ‘மக்களைக் கா... மேலும் பார்க்க

செம்மாண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பொன்விழா! அமைச்சா் பங்கேற்பு!

வெள்ளக்கோவில் செம்மாண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பொன்விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் பள்ளி தலைமை ஆசிரியா் கி.பாலசிவகுமாா் வரவேற்றாா். நகா்மன்ற உறுப்பினா் விஜயலட்சுமி முருகானந்தம் க... மேலும் பார்க்க