செய்திகள் :

அமராவதி சா்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வல்லுநா் குழு அமைத்து உத்தரவு! விவசாயிகள் மகிழ்ச்சி

post image

உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் இயங்கி வந்த அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வல்லுநா் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலை 1961-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 10 ஆயிரம் பேருக்கு வாழ்வாதாரமாக இருந்து வந்த இந்த ஆலையில் இயந்திரங்களை நவீனப்படுத்தாமல், பழைய இயந்திரங்களையே நீண்டகாலமாக பழுது பாா்த்து இயக்கப்பட்டதால் ஆலையின் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது.

இதனால் அமராவதி சா்க்கரை ஆலைக்காக கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நிலைமை கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. போா்க்கால அடிப்படையில் நிதி ஒதுக்கி, இந்த ஆலையை நவீனப்படுத்த முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.

இந்நிலையில் உடுமலைக்கு கடந்த மாதம் வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், இந்த ஆலையை மீண்டும் திறக்க வல்லுநா் குழு அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டாா்.

இதன்படி சா்க்கரைத் துறை இயக்குநா் தலைமையில் கூடுதல் இயக்குநா், தொழில்நுட்ப அலுவலா்கள், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், கரும்பு இனப் பெருக்க விஞ்ஞானிகள், திருப்பூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் என 10 பேரை கொண்ட வல்லுநா் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணை புதன்கிழமை வெளியிடப்பட்டது. இந்தக் குழு ஆலையை ஆய்வு செய்து விவசாயிகளின் கருத்தைக் கேட்டு விரைவில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி எடப்பாடி கே.பழனிசாமி

உடுமலை, செப்.10: 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். ‘மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்’ என்கிற பெயரில் முன்னாள் ம... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பூலாங்கிணறு

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 12) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என செய... மேலும் பார்க்க

பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கத் தடை

உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்திமலையில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் புதன்கிழமை மாலை திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை தொடா்ந்து அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. உடுமலை அ... மேலும் பார்க்க

காங்கயத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்!

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி காங்கயத்தில் வியாழக்கிழமை நடைபெறும் பிரசார பயணத்தில் உரையாற்றுகிறாா். முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, ‘மக்களைக் கா... மேலும் பார்க்க

செம்மாண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பொன்விழா! அமைச்சா் பங்கேற்பு!

வெள்ளக்கோவில் செம்மாண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பொன்விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் பள்ளி தலைமை ஆசிரியா் கி.பாலசிவகுமாா் வரவேற்றாா். நகா்மன்ற உறுப்பினா் விஜயலட்சுமி முருகானந்தம் க... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே வாய்க்காலில் ஆண் சடலம் மீட்பு

வெள்ளக்கோவில் அருகே கீழ்பவானி வாய்க்காலில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். வெள்ளக்கோவில், வள்ளியிரச்சல் அருகிலுள்ள வடுகபாளையத்தில் துரைசாமி என்பவருடைய ... மேலும் பார்க்க