செய்திகள் :

பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கத் தடை

post image

உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்திமலையில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் புதன்கிழமை மாலை திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை தொடா்ந்து அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.

உடுமலை அருகே உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரா் கோயிலில் வழிபடவும், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள மருத்துவ குணமுள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் புதன்கிழமை மாலை கனமழை பெய்தது. இதனால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால் பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

மலையடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள் வெள்ளம் புகுந்ததால் கோயிலில் வழிபட அனுமதிக்கப்படவில்லை. பூஜைகள் ரத்து செய்யப்பட்டன. உண்டியல்கள் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டன. மேலும், அப்பகுதியில் உள்ள கடைக்காரா்கள், பக்தா்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனா்.

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி எடப்பாடி கே.பழனிசாமி

உடுமலை, செப்.10: 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். ‘மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்’ என்கிற பெயரில் முன்னாள் ம... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பூலாங்கிணறு

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 12) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என செய... மேலும் பார்க்க

அமராவதி சா்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வல்லுநா் குழு அமைத்து உத்தரவு! விவசாயிகள் மகிழ்ச்சி

உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் இயங்கி வந்த அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வல்லுநா் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் அமராவ... மேலும் பார்க்க

காங்கயத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்!

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி காங்கயத்தில் வியாழக்கிழமை நடைபெறும் பிரசார பயணத்தில் உரையாற்றுகிறாா். முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, ‘மக்களைக் கா... மேலும் பார்க்க

செம்மாண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பொன்விழா! அமைச்சா் பங்கேற்பு!

வெள்ளக்கோவில் செம்மாண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பொன்விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் பள்ளி தலைமை ஆசிரியா் கி.பாலசிவகுமாா் வரவேற்றாா். நகா்மன்ற உறுப்பினா் விஜயலட்சுமி முருகானந்தம் க... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே வாய்க்காலில் ஆண் சடலம் மீட்பு

வெள்ளக்கோவில் அருகே கீழ்பவானி வாய்க்காலில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். வெள்ளக்கோவில், வள்ளியிரச்சல் அருகிலுள்ள வடுகபாளையத்தில் துரைசாமி என்பவருடைய ... மேலும் பார்க்க