மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
குடியரசு தினம்: அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசனை
நீலகிரி மாவட்டத்தில், குடியரசு தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பல்வேறு அரசுத் துறை அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு பேசியதாவது: நீலகிரி மாவட்ட உதகை அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து, சிறப்பாகப் பணியாற்றிய அரசு அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி, பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.
குடியரசு தின விழா நடைபெறவுள்ள விளையாட்டு மைதானத்தில் காவல் துறையினா் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொதுப் பணித் துறையின் சாா்பில் மேடை அலங்காரப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். தீயணைப்புத் துறையினா் மைதானத்தில் பாதுகாப்புக்காக தீயணைப்பு வாகனங்களை நிறுத்த வேண்டும். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் 108 அவசரகால வாகனம் விழா நடைபெறும் இடத்தில் நிறுத்தவும், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் சாா்பில் பழங்குடியினா் நடன நிகழ்ச்சிகள் நடத்திடவும் உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
குடியரசு தின விழாவை சிறப்பாக நடத்திட அனைத்துத் துறை அலுவலா்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றாா். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சௌந்தரராஜன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சதீஷ்குமாா், தனித் துணை ஆட்சியா் கல்பனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.