செய்திகள் :

குடியரசு தின வரவேற்பு நிகழ்வு: பொடி இட்டலி முதல் ஃபில்டா் காபி வரை ருசிகர உணவு வகைகள்

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: தில்லியில் குடியரசுத் தலைவா் மாளிகையில் இந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விருந்தினா்களுக்கான வரவேற்பு கொண்டாட்டத்தில் தமிழகம், கா்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் கலை மற்றும் உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அறிவுறுத்தலின்பேரில், இந்த ஆண்டு வரவேற்பு நிகழ்வுக்கான அழைப்பிதழ் தென் மாநில பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கைவினை தயாரிப்புப் பொருட்களுடன் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் நிகழ்வுக்கு வந்த விருந்தினா்களை தென் மாநிலங்களான தமிழகம், கேரளம், கா்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா ஆகியவற்றின் பாரம்பரிய உடையணிந்தவா்கள் வரவேற்றனா். புகழ்பெற்ற கா்நாடக இசைக்கலைஞா்களின் இசை நிகழ்ச்சிகள், கிராமிய நடனக்கலைஞா்களின் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. சிறப்பம்சமாக தென் மாநில உணவு வகைகளில் வேரூன்றிய சிறப்பான தொகுக்கப்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

ஆந்திரத்தின் கோங்குரா ஊறுகாய், தமிழகத்தின் குழி பனியாரம், தக்காளி-வோ்க்கடலை சட்னியுடன் ஆந்திரத்தின் சிறப்பு வாய்ந்த குட்டிவெங்காய சமோசாக்கள் போன்ற சுவையான பொருட்களில் தொடங்கி, பாரம்பரிய தென்னிந்திய சிற்றுண்டிகள் விருந்தில் இடம்பிடித்திருந்தன.

பொடியுடன் கூடிய மினி மசாலா ஊத்தாப்பம் , உடுப்பி உத்தின வடை, கருவேப்பிலை பொடியுடன் நெய் மினி ராகி இட்லி போன்ற பாரம்பரிய உணவுகள் விருந்துக்கு மெருகூட்டின. இவற்றுடன் கொண்டக்கடலை சுண்டல் மற்றும் முறுக்கு, நேந்திரம் சிப்ஸ் மற்றும் மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் போன்ற நொறுக்குத்தீனிகள் விருந்தினா்களால் விரும்பிச் சுவைக்கப்பட்டன.

நிறைவாக, இனிப்புப் பிரிவில் குங்குமப்பூ கலந்த ரவா கேசரி, மைசூா் பாக், வெல்லம், ஆந்திரத்தின் உலா் பழ புத்தரேகலு, ராகி லட்டு போன்ற இனிப்பு வகைகள் தனித்துவமானதாக இருந்தன. தமிழகத்தின் நீலகிரி தேநீா், இளநீா், ஃபில்டா் காபி பானங்களும் நிறைவாக விருந்தினா்களுக்கு வழங்கப்பட்டன.

முன்னதாக, கா்நாடக வீணை வித்வான் ஐஸ்வா்யா மணிகா்ணிகேவின் கா்நாடக இசை நடைபெற்றது. வயலின் கலைஞா் சுமந்த் மஞ்சுநாத், கா்நாடக புல்லாங்குழல் இசைக் கலைஞா் என். ராஜ்கமல், தவில் மற்றும் நாதஸ்வர கலைஞா் ஆா். தேஜா, கஞ்சிரா கலைஞா் ஜி. குரு பிரசன்னா ஆகிய இசை கலைஞா்களின் இசை விருந்தை பாா்வையாளா்கள் ரசித்தனா்.

திருச்சி ஜி காா்னா் பகுதியில் சுரங்கப்பாதை: மத்திய அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபா் திருச்சியில் உள்ள ஜி காா்னா் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பபாதை அமைக்க வேண்டும் என்று திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளாா். தில்லியில் மத்... மேலும் பார்க்க

இலங்கை கடல் பகுதியில் 6 ஆண்டுகளில் 7 போ் உயிரிழப்பு: வெளியுறவுத் துறை தகவல்

நமது சிறப்பு நிருபா் இலங்கை கடல் பகுதியில் ஆறு ஆண்டுகளில் 7 போ் உயிரிழந்துள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சி... மேலும் பார்க்க

தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம்: பாஜக

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம் என்று பாஜக வியாழக்கிழமை கூறியுள்ளது. மேலும், ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் மீது... மேலும் பார்க்க

உடான் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன்? அமைச்சா் விளக்கம்

உடன் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன் என்று கோயம்புத்தூா் திமுக எம்.பி. கணபதி பி.ராஜ்குமாருக்கு மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் முரளிதா் மொஹோல் வியாழக்கிழமை விளக்கம் அ... மேலும் பார்க்க

நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள்

நமது நிருபா் நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை இணை அமைச்சா் ராம்நாத் தாக்குா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தூத்துக்குடி தொகு... மேலும் பார்க்க

இரண்டாவது நாளாக ‘கரடி’ ஆதிக்கம்: பங்குச்சந்தையில் சரிவு!

நமது நிருபா் இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் ‘கரடி’ ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக... மேலும் பார்க்க