செய்திகள் :

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: "முதல்வர் ஸ்டாலினிடம் பேசிட்டு சொல்றேன்" - கமல்ஹாசன் சொல்வது என்ன?

post image

நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜூலை 21-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் பதவியிலிருந்து ஜெக்தீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்தார்.

இதன் காரணமாக தற்போது காலியாக இருக்கும் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு செப்டம்பர் 9-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இத்தகைய சூழலில், மத்தியில் ஆளும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியானது, தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.,யும், பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவரும், மகாராஷ்டிராவின் தற்போதைய ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக அறிவித்திருக்கிறது.

சுதர்சன் ரெட்டி - சி.பி.ராதாகிருஷ்ணன்
சுதர்சன் ரெட்டி - சி.பி.ராதாகிருஷ்ணன்

மறுபக்கம், காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி, தெலங்கானாவைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை தங்கள் சார்பில் வேட்பாளராக அறிவித்திருக்கிறது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் வேட்பாளர் தேர்வு குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசனிடம், குடியரசு துணைத் தலைவர் பதவி தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

அதற்கு கமல்ஹாசன், "நான் தமிழ்நாட்டிலிருந்து தலைநகருக்குப் போனது, தமிழ்நாட்டுக்கு என்னென்ன பயன்களைக் கொண்டுவர முடியும் என்பதற்கும், அவை கிடைக்கவில்லையென்றால் ஏன் கிடைக்கவில்லை என்று கேட்பதற்கும்தான்.

கமல்ஹாசன் - ஸ்டாலின்
கமல்ஹாசன் - ஸ்டாலின்

எனக்கு நாடும் முக்கியம், தமிழ்நாடும் முக்கியம். இதில், தமிழ்நாட்டையும் மனதில் கொண்டிருப்பவர்கள் யார் என்றுதான் தேர்ந்தெடுக்க முடியும்.

எங்கள் கூட்டணியில் பல ஆளுமைகள் இருக்கின்றனர். அதில் எனக்கு நெருக்கமான, தமிழர்களுக்கு நெருக்கமான ஆளுமை என்று பார்த்தால் அது தமிழக முதல்வர்தான்.

அவரிடம் கலந்தாலோசித்துவிட்டு சொல்வதுதான் சரியாக இருக்கும்" என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

CPI: 'மாநிலச் செயலாளராக முத்தரசன் தொடர்வாரா?' - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் என்ன நடந்தது?

கடந்த மூன்று தினங்களாக சேலத்தில் நடந்து வருகிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட இந்த மாநா... மேலும் பார்க்க

Sanitary Workers: 'தூய்மைப் பணியாளர்களுக்குப் பணிநிரந்தரம்?' - திருமாவளவனின் கருத்து சரியா?|In Depth

தனியார்மய எதிர்ப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப் பணியாளர் போராட்டத்தை முன்னெடுத்தனர். 13 நாட்கள் போராடியவர்களை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்... மேலும் பார்க்க

Vice President: "தமிழரை நிறுத்திவிட்டால் மட்டும் போதுமா?" - சி.பி.ராதாகிருஷ்ணன் குறித்து கனிமொழி

வருகின்ற செப்டம்பர் 9ம் தேதி நடைபெறக் கூடிய துணைக்குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாகக் களமிறங்கும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெ... மேலும் பார்க்க

குஜராத் அவலம்: "எங்களுக்கு இப்போதுதான் சுதந்திரம்" - பட்டியலின மக்கள் சலூன் கடையில் முடிவெட்ட அனுமதி

குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பட்டியலின மக்கள் கிராமத்தில் உள்ள கடைகளில் முடிவெட்டிக்கொள்ள ஆதிக்கச் சாதியினர் தடை விதித்து இருந்தனர்.குஜராத்தில் உள்ள பனஸ்காந்தா மாவட்டத்தில் உள்ள ஆல்வடா என்ற கிராமத... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: ``ரூ.56 கோடி வீணானது; இந்த முறையாவது குடிக்க தண்ணீர் கிடைக்குமா?'' - தவிக்கும் மக்கள்

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பையூர் ஊராட்சியில் 1998 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், ... மேலும் பார்க்க

``டி.ஆர்.பாலு பொதுவாழ்வில் பயணித்திட அன்பை வழங்கியவர்!'' - TRB-ன் மனைவி இறப்புக்கு ஸ்டாலின் இரங்கல்

நாடாளுமன்றத்தின் திமுக தலைவர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி பாலு இன்று காலை காலமானார். டி.ஆர்.பாலு மற்றும் தமிழ்நாடு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவிற்கு நேரில் சென்று இரங்கலைத் தெரிவித்துள்ளார் தமிழ்நாட... மேலும் பார்க்க