செய்திகள் :

CPI: 'மாநிலச் செயலாளராக முத்தரசன் தொடர்வாரா?' - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் என்ன நடந்தது?

post image

கடந்த மூன்று தினங்களாக சேலத்தில் நடந்து வருகிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட இந்த மாநாடு நேற்றுடன் முடிவடைந்தது.

இந்த மாநாட்டில் புதிய செயலாளர் தேர்வு செய்யப்படலாம் என்றார்கள். ஆனால் எல்லோரும் எதிர்பார்த்தபடி புதிய மாநிலச் செயலாளர் தேர்வு நடக்கவில்லை.

முத்தரசன்
முத்தரசன்

மாநில நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலக் குழு அடுத்த சில தினங்களில் சென்னையில் கூடி புதிய மாநிலச் செயலாளரைத் தேர்வு செய்யும். அதுவரை முத்தரசனே மாநிலச் செயலாளராகச் செயல்படுவார் எனத் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக முத்தரசனுக்கு வயது 75 தாண்டி விட்டதால் கட்சி விதிப்படி அவரால் செயலாளராகத் தொடர முடியாது என்கிற செய்திகள் வெளியாகி வந்தன.

கம்யூனிஸ்ட் கட்சி
கம்யூனிஸ்ட் கட்சி

கட்சியின் தேசியச் செயலாளர் நாராயணனும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இந்தத் தகவலைப் பதிந்து முத்தரசனுக்கு செவ்வணக்கம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் மாநிலச் செயலாளரைத் தேர்வு செய்யாமலேயே மாநாடு நிறைவு பெற்றுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: "முதல்வர் ஸ்டாலினிடம் பேசிட்டு சொல்றேன்" - கமல்ஹாசன் சொல்வது என்ன?

நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜூலை 21-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் பதவியிலிருந்து ஜெக்தீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்தார்.இதன் காரணமாக தற்போது காலியாக இருக்கும் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு ... மேலும் பார்க்க

Sanitary Workers: 'தூய்மைப் பணியாளர்களுக்குப் பணிநிரந்தரம்?' - திருமாவளவனின் கருத்து சரியா?|In Depth

தனியார்மய எதிர்ப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப் பணியாளர் போராட்டத்தை முன்னெடுத்தனர். 13 நாட்கள் போராடியவர்களை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்... மேலும் பார்க்க

Vice President: "தமிழரை நிறுத்திவிட்டால் மட்டும் போதுமா?" - சி.பி.ராதாகிருஷ்ணன் குறித்து கனிமொழி

வருகின்ற செப்டம்பர் 9ம் தேதி நடைபெறக் கூடிய துணைக்குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாகக் களமிறங்கும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெ... மேலும் பார்க்க

குஜராத் அவலம்: "எங்களுக்கு இப்போதுதான் சுதந்திரம்" - பட்டியலின மக்கள் சலூன் கடையில் முடிவெட்ட அனுமதி

குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பட்டியலின மக்கள் கிராமத்தில் உள்ள கடைகளில் முடிவெட்டிக்கொள்ள ஆதிக்கச் சாதியினர் தடை விதித்து இருந்தனர்.குஜராத்தில் உள்ள பனஸ்காந்தா மாவட்டத்தில் உள்ள ஆல்வடா என்ற கிராமத... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: ``ரூ.56 கோடி வீணானது; இந்த முறையாவது குடிக்க தண்ணீர் கிடைக்குமா?'' - தவிக்கும் மக்கள்

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பையூர் ஊராட்சியில் 1998 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், ... மேலும் பார்க்க

``டி.ஆர்.பாலு பொதுவாழ்வில் பயணித்திட அன்பை வழங்கியவர்!'' - TRB-ன் மனைவி இறப்புக்கு ஸ்டாலின் இரங்கல்

நாடாளுமன்றத்தின் திமுக தலைவர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி பாலு இன்று காலை காலமானார். டி.ஆர்.பாலு மற்றும் தமிழ்நாடு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவிற்கு நேரில் சென்று இரங்கலைத் தெரிவித்துள்ளார் தமிழ்நாட... மேலும் பார்க்க