செய்திகள் :

சௌதி சூப்பர் கோப்பை: ரொனால்டோ உதவியால் அல்-நாஸர் இறுதிக்கு முன்னேற்றம்!

post image

அல்-நாஸர் அணி சௌதி சூப்பர் கோப்பை அரையிறுதியில் 2-1 என வென்றது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டாவது கோல் அடிக்க அசிஸ்ட் செய்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

ஹாங்காங்கில் அமைந்துள்ள ஹாங்காங் ஸ்டேடியம் எனும் திடலில் இந்தப் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியின் 10-ஆவது நிமிஷத்தில் அல்-நாஸர் அணியின் சடியோ மானே கோல் அடித்து அசத்தினார். அதற்கு பதிலடியாக அல்-இத்திஹாத் கிளப் 16-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தது.

1-1 என சம்நிலையில் இருக்க, 25-ஆவது நிமிஷத்தில் ரெட் கார்டு கொடுத்து சடியோ மானே வெளியேற்றப்பட்டார். இதனால், 10 வீரர்களுடன் விளையாடியது அல்-நாஸர்.

முதல் பாதியில் இரு அணியும் 1-1 சமநிலையில் இருக்க, இரண்டாம் பாதியில் அல்-நாஸர் அணி ஆதிக்கம் செலுத்தியது.

இந்தப் போட்டியின் 61-ஆவது நிமிஷத்தில் நட்சத்திர வீரர் ரொனால்டோ செய்த அசிஸ்ட்டால் அந்த அணியின் ஜாவோ பெலிக்ஸ் கோல் அடித்தார்.

90+5-ஆவது நிமிஷம் வரை போராடியும் அல்-இத்திஹாத் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில், அல்-நாஸர் அணி 2-1 என வெற்றி பெற்றது.

சௌதி சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியில் அல்-நாஸர் அணியுடன் வரும் சனிகிழமை (ஆக.23) அல்-கத்சியா எஃப்சி அல்லது அல்-அஹ்லி சவுதி அணி மோதவிருக்கிறது.

Al-Nassr won the Saudi Super Cup semi-final 2-1.

சௌதி சூப்பர் கோப்பையில் சர்ச்சை: அல்-நாஸர் வீரருக்கு ரெட் கார்டு!

சௌதி சூப்பர் கோப்பையின் அரையிறுதியில் அல்-நாஸர் வீரர் சடியோ மானேவிற்கு வழங்கப்பட்ட ரெட் கார்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அல்-நாஸர் வீரர் சடியோ மானே சௌதி சூப்பர் கோப்பையில் பந்தை துரத்திச் செல்லும்ப... மேலும் பார்க்க

பேன்ட் பாக்கெட்டுகளில் போன்; மடியில் லேப்டாப் வைத்தால்..? - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

பேன்ட் பாக்கெட்டுகளில் மொபைல் போன் வைத்திருப்பது, மடிக்கணினியை மடியில் வைத்து நீண்ட நேரம் பயன்படுத்துவது ஆண்களிடையே விந்தணு எண்ணிக்கையைக் குறைக்கும் என சமீபத்திய ஓர் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. ... மேலும் பார்க்க

போலந்து நாட்டிற்காக வரலாறு படைத்த இகா ஸ்வியாடெக்..! 6 முறையும் பாலினி தோல்வி!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் மகளிர் இறுதிப் போட்டியில் இகா ஸ்வியாடெக் கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளார். சின்சினாட்டியில் முதல்முறையாக ஓபன் பிரிவில் போலந்து வீரர் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனையை நிக... மேலும் பார்க்க

சினிமாவில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த ரெஜினா!

நடிகை ரெஜினா கேசண்ட்ரா சினிமாவில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். சென்னையைச் சேர்ந்தவரான நடிகை ரெஜினா கேசண்ட்ரா தமிழில் 2005-ல் ’கண்டநாள் முதல்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந... மேலும் பார்க்க

மிகக் குறுகிய காலத்தில் நிறைவடையும் மீனாட்சி சுந்தரம் தொடர்!

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி சுந்தரம் தொடர் இந்த வார இறுதியில் நிறைவடைகிறது.திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் மீனாட்சி சுந்தரம் தொடர் ஒளிபரப்பாக... மேலும் பார்க்க

மறுஒளிபரப்பாகும் தொடர்கள் டிஆர்பி பெறுகின்றனவா?

தொலைக்காட்சிகளில் மறுஒளிபரப்பாகும் தொடர்கள் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெறுகின்றனவா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான தொடர்களான கோலங்கள், திருமதி செல்வம் போன்றவை தொலைக்கா... மேலும் பார்க்க