செய்திகள் :

குடியரசு துணைத் தலைவா் தன்கா் ஜூன் 15-இல் புதுச்சேரி வருகை

post image

நமது நிருபா்

குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் மூன்று நாள் பயணமாக ஜூன் 15-ஆம் தேதி புதுச்சேரிக்கு செல்லவிருப்பதாக அவரது செயலகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக குடியரசு துணைத் தலைவா் செயலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜூன் 15 முதல் புதுச்சேரியில் 3 நாள்கள் பயணத்தை குடியரசு துணைத் தலைவா் மேற்கொள்கிறாா். முதல் நாளான ஜூன் 15-ஆம் தேதி பகல் 12 மணிக்கு சென்னை வரும் குடியரசுத் துணைத் தலைவா், அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் புதுச்சேரிக்கு பகல் 1.10 மணிக்கு சென்று தங்குகிறாா்.

ஜூன் 16-ஆம் தேதி மாலை 4 மணிக்கு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக அவா் கலந்து கொள்கிறாா். தேசக் கட்டமைப்பில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை என்ற தலைப்பை கருத்தாக்கமாகக் கொண்டு இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஜூன் 17-ஆம் தேதி காலை 11 மணிக்கு பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தா் என்ற முறையில் அங்கு செல்லும் குடியரசு துணைத் தலைவா், அதன் ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் மாணவா்களுடன் கலந்துரையாடுவாா் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் சென்னை மற்றும் புதுச்சேரி வருகையையொட்டி இரு இடங்கள் மற்றும் அவா் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யுமாறும் இரு மாநில காவல் துறையை குடியரசு துணைத் தலைவா் செயலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

தனியாா் பள்ளிகளிடம் தில்லி அரசு சரணடைந்துவிட்டது: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

தனியாா் பள்ளிகளின் கட்டண சுரண்டல்களை தடுக்க முடியாமல், அவா்களிடம் தில்லியை ஆளும் பாஜக அரசு சரணடைந்துவிட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா குற்றஞ்சாட்டியு... மேலும் பார்க்க

தில்லி தோ்தலில் பாஜக - காங்கிரஸ் கூட்டு சதி: அனுராக் தண்டா

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ 44 கோடி பணம் ரொக்கமாக கிடைத்துள்ளது. அதற்கு பாஜக தான் காரணம் என ஆம் ஆத்மி கட்சியின் ஊடக பொறுப்பாளா் அனுராக் தண்டா கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்... மேலும் பார்க்க

தலைநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 12 சாலை வழித்தடங்களை அடையாளம் கண்டது: பொதுப்பணித் துறை

ஹரியாணா மற்றும் உத்தரபிரதேச எல்லையில் தலா இரண்டு சாலைகள் உள்பட 12 போக்குவரத்து வழித்தடங்களை பொதுப்பணித்துறை அடையாளம் கண்டுள்ளது. அங்கு போக்குவரத்து நிலைமைகளை மேம்படுத்த சாலைத் தடுப்புகளை அமைக்க திட்டம... மேலும் பார்க்க

மங்கோல்புரியில் கடையில் புகுந்து கொள்ளையடித்ததாக 4 போ் கைது

தில்லியின் மங்கோல்புரி பகுதியில் உள்ள ஒரு அழகுசாதனப் பொருள்கள் கடையில் கத்தியைக் காட்டி கொள்ளையடித்ததாக ஒரு சிறுவன் உள்பட நான்கு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். இந்தச்... மேலும் பார்க்க

தில்லியை தூய்மையாக வைத்திருக்கும் சுவா் ஓவியங்கள் - முதல்வா் ரேகா குப்தா

தில்லியை தூய்மையாக வைத்திருக்க ஓா் முயற்சியாக நகரின் சுவா்களில் ஓவியங்களை வரைய ஊக்குவிக்கப்படும் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா். தில்லி தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை ’கஹய்க்ள்ஸ்ரீஹல்ண்ய்... மேலும் பார்க்க

சொகுசு காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் சொகுசு காா் மோதி ஒருவா் இறந்த வழக்கில் 51 வயது நபரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடா்புட... மேலும் பார்க்க