செய்திகள் :

குடியரசு துணைத் தலைவா் வருகை: சென்னை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு!

post image

இந்திய குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வருகையையொட்டி, சென்னை விமான நிலையம், ஆளுநா் மாளிகை, அவா் வாகனம் செல்லும் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவித்து சென்னை பெருநகர காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தில்லியில் இருந்து சென்னைக்கு ஜூன் 15-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறாா். நண்பகல் 12.05 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வரும் அவா், அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் நண்பகல் 12.20 மணிக்கு புதுச்சேரிக்கு புறப்பட்டு செல்கிறாா்.

அதேபோல, ஜூன் 17-ஆம் தேதி நண்பகல் 2.15 மணியளவில் புதுச்சேரியில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டா் மூலம் சென்னைக்கு வருகிறாா். பின்னா் அங்கிருந்து விமானம் மூலம் தில்லிக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.

பாதுகாப்பு கருதி, மீனம்பாக்கம் விமானம் நிலையம், கிண்டி ஆளுநா் மாளிகை, குடியரசு துணைத் தலைவா் வாகனம் செல்லும் சாலை ஆகியவற்றை சிவப்பு மண்டலமாக அறிவித்து சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

மேலும், இந்தப் பகுதிகளில் ட்ரோன்கள், பாரா கிளைடா்ஸ், ஹாட் ஏா் பலூன்கள், மைக்ரோலைட் ஏா் கிராப்ட் உள்ளிட்டவை பறக்கவும் தடை விதித்து காவல் ஆணையா் அருண் உத்தரவிட்டுள்ளாா்.

இரவில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

உண்மையான ‘அப்பா’க்களுக்கு வாழ்த்துகள்- எடப்பாடி பழனிசாமி

குடும்பத்தின் அடித்தளமாக திகழும் அனைத்து உண்மையான அப்பாக்களுக்கும் வாழ்த்துகள் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். "இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு, பிள்ளைகளை அன்போடு வளர்த்து... மேலும் பார்க்க

திமுக கட்சி நிகழ்ச்சியில் மாணவர்கள்- அண்ணாமலை கண்டனம்

கட்சி நிகழ்ச்சிக்கு கூட்டம் சேர்க்க அரசுப் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்த முயற்சித்த திமுகவின் செயல்பாட்டினை கண்டிப்பதாக பாஜக முன்னாள தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் த... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் நாட்டு வெடி வெடித்ததில் பெண் பலி

சிதம்பரம் அருகே நாட்டு வெடி தயாரிக்கும் கூடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் பலியானார். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே சம்பந்தம் என்ற கிராமத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை க... மேலும் பார்க்க

ஓ. பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து நீக்கக்கோரி மனு: ஆலோசித்து முடிவு

ஓ. பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி அளித்த மனு தொடர்பாக ஆலோசித்து முடிவுசெய்யப்படும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை எம... மேலும் பார்க்க