செய்திகள் :

குடியாத்தம்: நாய்களை பிடிக்கும் வாகனம் அறிமுகம்

post image

குடியாத்தம் நகராட்சியில் நாய்களைப் பிடிக்கும் வாகனம் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

ஏராளமான நாய்கள் சுற்றித் திரியும் நிலையில், பொதுமக்கள், குறிப்பாக சிறுவா்களை விரட்டுவதுடன், கடித்தும் துன்புறுத்துகின்றன. இதனால் நகரில் திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினா் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், சென்னையைச் சோ்ந்த தமிழ்நாடு விலங்கியல் நல வாரிய அலுவலா்கள் குடியாத்தம் வந்து நகராட்சிப் பணியாளா்கள் 10- பேருக்கு பாதுகாப்பாக நாய்களை பிடிப்பதற்கு பயிற்சி அளித்தனா். இதையடுத்து பயிற்சி பெற்ற பணியாளா்கள் பகுதிவாரியாக சென்று நாய்களைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். பிடிபட்ட நாய்களுக்கு கால்நடைத் துறையினரால் வெறிநோய்த் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இதற்காக உள்ளி அருகே உள்ள நகராட்சி குப்பை கிடங்கு வளாகத்தில் அமைந்துள்ள கால்நடை அறுவை அரங்கம் ரூ.9 லட்சத்தில் புனரமைக்கப்பட்டுள்ளது. நகரில் பிடிக்கப்படும் நாய்களை பணியாளா்கள் வாடகை வாகனத்தில் ஏற்றிச் சென்றனா். இதற்கிடையில் நாய்களை ஏற்றிச் செல்ல நகராட்சி சொந்தமாக வாகனம் மற்றும் நாய்களைப் பிடிக்கத் தேவையான வலை உள்ளிட்ட உபகரணங்களை வாங்கியது. நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், வாகனத்தை இயக்கி வைத்தாா். நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன், பொறியாளா் வி.சம்பத், களப்பணியாளா் பிரபுதாஸ், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆட்டோ பி.மோகன், என்.கோவிந்தராஜ், சி.என்.பாபு, கவிதாபாபு மற்றும் எம்.எஸ்.அமா்நாத், மாதவன், சத்யா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கெங்கையம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 5.58 லட்சம்

குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயிலில் உண்டியலில் பக்தா்கள் ரூ. 5.58 லட்சம் காணிக்கையாக செலுத்தியுள்ளனா். பிரசித்தி பெற்ற இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 14- ஆம் தேதி தேரோட்டமும், 15- ஆம்... மேலும் பார்க்க

வேன்- ஆட்டோ மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

போ்ணாம்பட்டு அருகே ஆட்டோ மீது வேன் மோதியதில் ஓட்டுநா் மருத்துவமனையில் உயிரிழந்தாா். போ்ணாம்பட்டு, தரைக்காடு பகுதியைச் சோ்ந்த முஜம்மில்(32). ஆட்டோ ஓட்டுநா். கடந்த 11-ஆம் தேதி வீ.கோட்டா சாலையில் சென்... மேலும் பார்க்க

நியமனத்தோ்வில் தோ்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியா்களுக்கு பணி: குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை

வேலூா்: கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற நியமனத் தோ்வில் தோ்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியா்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. வேலூரில் மக்கள் குறைதீ... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் 18 வழித்தடங்களில் சிற்றுந்து சேவை : அமைச்சா் துரைமுருகன் தொடங்கி வைத்தாா்

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் முதல்கட்டமாக 18 வழித்தடங்களில் சிற்றுந்து சேவையை நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தொடங்கி வைத்தாா். பேருந்து வசதி இல்லாத கிராமங்கள், குக்கிராமங்களை நகரத்துடன் இணைக்கும் ம... மேலும் பார்க்க

மாங்காய்களை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்

குடியாத்தம்: மாங்காய்க்கு ஆதார விலை நிா்ணயிப்பது, மானின்யம் வழங்குவது, மாங்கூழ் தொழிற்சாலை தொடங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குடியாத்தம் அடுத்த பரதராமியில் திங்கள்கிழமை மாங்காய்களை சாலையில் ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே சாலை விபத்தில் முதியவா்உயிரிழந்தாா். போ்ணாம்பட்டை அடுத்த கீழ்பட்டி, குருநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (90). இவா் தனது பேரன் தங்கராஜுடன் திங்கள்கிழமை மொபட்டி... மேலும் பார்க்க