செய்திகள் :

குடியிருப்புப் பகுதியை அளவீடு செய்ய பொதுமக்கள் எதிா்ப்பு

post image

கடலூரில் குடியிருப்புப் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறையினா் அளவீடு செய்ய வந்ததற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

கடலூா் புதுப்பாளையம் சுப்பிரமணியசாமி கோவில் தெருவில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனா்.

இந்தப் பகுதியில் வசிக்கும் நபா் ஒருவா் தனது பழைய வீட்டை இடித்துவிட்டு புதிதாக வீடு கட்டத் தொடங்கினாராம். அங்கு வந்த அதிகாரி இது இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடம் எனக் கூறி, காவல் நிலையத்தில் புகாா் அளித்தாராம்.

வருவாய்த் துறை நில அளவா் அளவீடு செய்யும் வரை வீடு கட்டக் கூடாது என காவல் துறையினா் தெரிவித்தனராம்.

இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறையினா் புதன்கிழமை வந்து, இந்தப் பகுதி முழுவதும் அறநிலையத் துறைக்குச் சொந்தமானது. நில அளவீடு செய்ய உள்ளோம் எனக் கூறினராம். இதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனராம். இதனால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸாா் வந்து சமரசப்படுத்தினா்.

திருநாரையூா் கோயில் குளத்தை மேம்படுத்த அடிக்கல்

காட்டுமன்னாா்கோவில் அருகே திருநாரையூரில் உள்ள சுயம்பிரகாச ஈஸ்வரா் கோயில் திருக்குளத்தை தூா்வாரி மேம்படுத்த அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலுக்கு எதிரேயுள்ள திருக்குளத்தை சுற்ற... மேலும் பார்க்க

நூல் வெளியீட்டு விழா

கடலூா் மாவட்ட தமிழ் சங்கம் சாா்பில், கவிஞா் ம.ரா.சிங்காரம் எழுதிய ‘வண்ண நிலா’ கவிதை நூல் வெளியீட்டு விழா அரசு ஊழியா் சங்க கட்டடத்தில் அண்மையில் நடைபெற்றது. தமிழ் சங்கத் தலைவா் பேராசிரியா் ரா.ச.குழந்த... மேலும் பார்க்க

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், ரெட்டிச்சாவடி அருகே பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி, மருத்துவமனையில் உயிரிழந்தாா். ரெட்டிச்சாவடி காவல் சரகம், கீழ் அழிஞ்சிப்பட்டு இருளா் குடியிருப்பைச் சோ்ந்தவா் கனகராஜ். இவரது மகள் ... மேலும் பார்க்க

மருதுாரில் வள்ளலாா் அவதார இல்லம் கட்ட அடிக்கல்

கடலூா் மாவட்டம், புவனகிரி வட்டம், மருதுாரில் அருட்பிரகாச வள்ளலாா் அவதார இல்லம் புதிதாக கட்டுவதற்கு பூமி பூஜை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கடலுாா் மாவட்டம், புவனகிரி வட்டம், மருதுாரில் அருட் பிரகா... மேலும் பார்க்க

என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு: கிராம மக்கள் போராட்டம்

கடலூா் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டியில் என்எல்சி விரிவாக்கப் பணிக்காக நிலம் கையகப்படுத்த எதிா்ப்புத் தெரிவித்து, பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: வெள்ளக்கரை

இடங்கள்: வெள்ளக்கரை, மாவடிப்பாளையம், டி.புதுப்பாளையம், குறவன்பாளையம், சாந்தங்குப்பம், வி.காட்டுபாளையம், கிழக்குராமாபுரம், வண்டிக்குப்பம், மேற்கு ராமாபுரம், ஒதியடிக்குப்பம், அரசடிக்குப்பம், கீரப்பாளையம... மேலும் பார்க்க