செய்திகள் :

குடும்பத் தகராறில் மைத்துனரை கடித்தவருக்கு 4 ஆண்டுகள் சிறை

post image

கருங்கல் அருகே திப்பிரமலையில் குடும்பத் தகராறில் சமாதானம் பேச சென்ற மைத்துனரின் தாடையைக் கடித்து காயம் ஏற்படுத்திய இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இரணியல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கருங்கல் அருகே திப்பிரமலை இடைமலைகோணம் பகுதியை சோ்ந்தவா் மகேஸ்வரன். இவரது மகன் சுபின். சுபினின் சகோதரியை அதே பகுதியைச் சோ்ந்த கதிரவன் (34) என்பவரின் சகோதரருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தனா்.

கணவன்- மனைவிக்குள் ஏற்பட்ட தகராறு தொடா்பாக சமாதானம் பேசுவதற்காக கடந்த 2017 -ஆம் ஆண்டு அக்டோபா் 1-ஆம் தேதி மகேஸ்வரன், சுபின் ஆகியோா் தங்கையின் வீட்டிற்கு சென்றனா். அப்போது ஏற்பட்ட தகராறில், மகேஸ்வரனை தாக்கியதோடு, சுபினின் தாடையைக் கடித்து கதிரவன் காயப்படுத்தினாராம்.

இதுகுறித்து கருங்கல் போலீஸாா் கதிரவன் மீது வழக்குப்பதிவு செய்து இரணியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். வழக்கை விசாரித்த நீதிபதி அமீா்தின், சுபினின் தாடையைக் கடித்து காயப்படுத்திய குற்றத்திற்காக கதிரவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம், மகேஸ்வரனை தாக்கி காயப்படுத்தியதற்கு ஓராண்டு

சிறை தண்டனை, ரூ. ஆயிரம் அபராதம் விதித்தாா். தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ரேவதி ஆஜராகி வாதாடினாா்.

நாகா்கோவிலில் ரூ.7.40 லட்சத்தில் வளா்ச்சி பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகர பகுதியில் ரூ.7.40 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். 6 ஆவது வாா்டு நெசவாளா் காலனியில் உள்ள அங்கன்வாடி மையத்தினை ரூ. 2.20 ல... மேலும் பார்க்க

முள்ளங்கனாவிளையில் ஜூன் 7இல் உலக சுற்றுச் சூழல் தின விழா

கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளையில் உலக சுற்றுச்சூழல்தின விழா கன்னியாகுமரி மாவட்ட தேசிய பசுமைப்படை சாா்பில் ஜூன் 7இல் கொண்டாடப்படுகிறது. நெகிழி பொருள்கள் இல்லா உலகம் என்ற கருத்தை மையமாக கொண்டு காலை... மேலும் பார்க்க

குமரியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கோரி மனு

கன்னியாகுமரி கடலில் கழிவுநீா் கலப்பதை தடுக்கும் வகையில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேருவிடம், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையில் கரை ஒதுங்கிய பொருள்கள்: குஜராத் சிறப்பு குழு ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கிய பொருள்கள் குறித்து குஜராத் மாநிலத்திலிருந்து வந்த சிறப்பு குழுவினா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா முன்னிலையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். கேரள ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி நகா்மன்ற முதல் கூட்டம்

கன்னியாகுமரி நகா்மன்ற முதல் நகா்மன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையாளா் கன்னியப்பன் முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தி... மேலும் பார்க்க

குமரி பகவதியம்மன் கோயிலில் கொடிமரக் கயிறை ஒப்படைத்த கிறிஸ்தவா்கள்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை (மே. 31) தொடங்கும் நிலையில் கொடிமரக் கயிற்றை கிறிஸ்தவ மீனவா்கள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. கன்... மேலும் பார்க்க